Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவிலை காவல் காக்கும் சைவ முதலைப் பற்றி தெரியுமா? வேந்தர் டிவியின் மூன்றாவது கண் பாருங்க
சென்னை : கேரளாவில் இருக்கும் முதலை காவல் காக்கும் அனந்தபத்மநாப சாமி கோயில் பற்றின விறுவிறுப்பான தகவல்கள் இந்த வாரம் வேந்தர் டிவியில் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
வேந்தர் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது மூன்றாவது கண். அமானுஷ்யங்களைப் பற்றின ஒரு பரப்பரப்பான தேடல்தான் இந்த நிகழ்ச்சி. அமானுஷ்ய உலகில் இதுவரை மறைந்திருந்த பல பயங்கர சடங்குகளையும் நம்பவே முடியாத ஆச்சரியங்களையும் மூன்றாவது கண் நிகழ்ச்சி வெளியுலகின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறது .
மூன்றாவது கண்
பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு 500 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் தற்போது, புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் தமிழகத்தைத்தாண்டி பல மாநிலங்களில் இருக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் தொடராக மூன்றாவது கண் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது.
கேரளா கோவில்
அந்த வகையில் வரும் வாரம், கேரளாவில் இருக்கும் முதலை காவல் காக்கும் அனந்தபத்மநாப சாமி கோயில் பற்றின விறுவிறுப்பான தகவல்கள் ஒளிபரப்பாக உள்ளது. கேரளா அனந்த பத்மநாப சாமி கோயில் நிலவறையில் இருந்து கிடைத்த புதையலைப்பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது.
முதலைக்கோவில்
அந்த அனந்த பத்மநாப சாமி கோயிலின் நீரால் சூழப்பட்ட ஆதிக்கோயிலைத்தான் ஒரு முதலை காவல் காத்து வருகிறது. சைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் அந்த முதலைக்கு பபியா என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள். முதலையை தரிசனம் செய்தால் அதிர்ஷ்டம் என்பதால், இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் எப்படியாவது இந்த முதலையை பார்க்க துடிக்கிறார்கள்.
அமானுஷ்யங்கள்
அகத்தியரின் சீடரால் உருவாக்கப்பட்ட, இந்த கோயிலின் நீர் சூழப்பட்ட இந்த குளத்திற்குள் பல ரகசியங்கள் புதைந்திருக்கிறது. இங்கு முதலை காவல் காப்பதன் பின்னணியிலும் சில அமானுஷ்யங்கள் இருக்கிறது. இந்த முதலை இறந்தால், அடுத்து, ஒரு முதலை எங்கிருந்தோ வந்து இந்த காவல் காக்கும் பணியை தொடர்கிறது..இப்படி முதலைக்கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் அமானுஷ்யங்கள் வரும் வாரம் வேந்தர் டிவியின் மூன்றாவது கண் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி தோறும் தினமும் இரவு 9.30 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது மூன்றாவது கண் நிகழ்ச்சி.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!