Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்ஆர்எம் குரூப்பில் இருந்து மேலும் ஒரு புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல்!
எஸ்ஆர்எம் கல்வி நிறுவன குரூப்பிலிருந்து புதிய தலைமுறை மற்றும் புதுயுகம் சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் வேந்தர் டிவி என்ற பெயரில் பொழுது போக்கு சேனல் நாளை முதல் வணிகரீதியான ஒளிபரப்பை தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த சேனல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், இனிதான் வணிக ரீதியாக ஒளிபரப்பை துவங்குகிறதாம்.
புத்தம் புது காலை என்ற பெயரில் காலை நேர பல்சுவை நிகழ்ச்சி, பாரதி கண்ணம்மா என்ற பெயரில் கோவை மண்வாசத்துடன் மெகா தொடர், சினிமா கிளைமேக்ஸ் தொடர்பான முடிவல்ல ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் வேந்தர் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளன.
குஷ்பு தொகுத்து வழங்கும் டாக்-ஷோவான நினைத்தாலே இனிக்கும், திக்..திக்..திக் என்ற பெயரில் திரில் அனுபவங்களின் தொகுப்பு போன்ற நிகழ்ச்சிகளும் வேந்தர் டிவியில் களைகட்ட போகின்றன.
"சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை தருவதே வேந்தர் டிவியின் நோக்கம்" என்று அதன் எம்.டி, ரவி பச்சமுத்து கூறியுள்ளார்.