Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
7ம் உயிர்... குளு குளு மணாலியில் படமான திகில் பேய் சீரியல்
சென்னை: தென்காசியில் தொடங்கிய 7ம் உயிர் சீரியல் கதை 200வது எபிசோடில் இருந்து குளுகுளு மணாலியில் இருந்து பயணப்பட உள்ளது. சின்னத்திரை சீரியலுக்காக முதல்முறையாக உறையவைக்கும் குளிரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் நெடுந்தொடர் "7ம் உயிர்". அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் சக்தி தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும் தீயவன் வீரபத்திரன் ஒரே நட்சத்திரத்தில் ஒரே நாளில் பிறந்து வெவ்வேறு இடங்களில் வாழும் ஏழு கன்னி பெண்களை அமாவசையன்று பலி கொடுத்தால் அந்த சக்தியை பெறலாம் என நினைக்கிறான் .
வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம்பெண்களை கொள்வதற்கு தேடி அலையும் இந்த தீய சக்தி பற்றிய இந்த திகில் தொடருக்காக தமிழகத்தின் தென்காசியில் தொடங்கிய கதை இமயமலையில் பயணப்படுகிறது.
பெண்களுக்கு ஆபத்து
ஒரே நட்சத்திரத்தில் பிறந்த 7 பெண்களுக்கு ஆபத்தை உருவாக்கும் இந்த வித்தியாசமான திகில் கதையை மிகவும் வித்தியாசமாக கொடுக்க நினைத்த இயக்குனர் ஒவ்வொரு பெண்ணும் பிறந்து வளரும் இடங்களை தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளாவில் படம்பிடித்து நடத்தினார்.
தென்காசி டூ இமயமலை
தென்காசி சுந்தரபாண்டியபுரத்தில் அதாவது இந்திய திருநாட்டின் தென்கோடியில் ஆரம்பித்த கதை ,வடகோடியான இமாச்சல பிரதேசத்தில் தற்போது பயணப்படுகிறது .
200வது எபிசோடு
7ம் உயித் திகில் தொடர் 200வது பகுதி ஒளிபரப்பாகவிருக்கிறது. கிளைமாக்ஸை நோக்கி கதை நகரஆரம்பித்துள்ளது., இந்த 200வது எபிசோடில் இருந்து ஒளிபரப்பாகவிருக்கும் காட்சிகள் அனைத்தும் இமாச்சல பிரதேசம் மணலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .
குளு குளு மணாலி
திரைப்படப் பாடல்கள் தவிர சின்னத்திரை தொடர்களுக்காக இதுவரை யாரும் இங்கு சென்று படப்பிடிப்பு நடத்தியதில்லை இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வேந்தர் டிவியில் "7ம் உயிர்" நெடுந்தொடருக்காகவே இங்கு படப்பிடிப்பு நடத்தினார்கள் என்பது இத்தொடரின் தனிப்பெரும் சிறப்பு.
கடும் குளிரில் திகில் பேய்
இத்தொடரைப்போலவே படப்பிடிப்பு நடத்திய இடங்களிலும் திகில் தொடரவே செய்தது .கடுங்குளிர் ,உறைப்பனி ,சில்லென்ற நீரோடை ,செங்குத்தான மலைப்பாதை என்று ரத்தத்தை உறையவைக்கும் சிரமங்களை சந்தித்து "7ம் உயிர்" படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.
200வது பகுதி முதல் பரபரப்பான திருப்பங்களுடன் பயணப்பட உள்ள 7ம் உயிர் சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகிறது .