Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மேடையில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன சக நடிகை !
சென்னை : விஜய் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா ஷெட்டி கதறி அழுது அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டார்.
பாக்யலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.
கேஜிஎப்-2 கொடுத்த சூப்பர் டூப்பர் வெற்றி...3-வது பாகம் பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல் இதோ
பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இரவு 8.30 மணி ஆகிவிட்டால் போதும் இல்லத்தரசிகள், சரியாக டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள்.இந்த தொடரில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா ஷெட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.
விவாகரத்து செய்த கோபி
பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். பிடிக்காத மனைவியுடன் வாழ்ந்து வருவதாக பொய்யை கூறியே ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார் கோபி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தர பாக்யாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் கோபிக்கு எழுந்துள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பாக்கியாவிற்கு தெரியாமலே அவரிடம் கையெழுத்து வாங்கி, அடுக்கடுக்காக பொய் சொல்லி ஒருவழியாக கோர்ட்டுக்கு கூட்டி சென்று விடுகிறார். இப்போது தான் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு அதிகரித்து வருகின்றது எனலாம். கோபி எப்போது குடும்பத்தினரிடம் சிக்குவார், அவரின் தவறு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மேடையிலே அழுதார்
இந்நிலையில், விஜய் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், ஃபேவரெட் நாயகிக்கான விருது சுசித்ரா ஷெட்டிக்கு கிடைத்துள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு சுசித்ரா, தமிழ் மக்களுக்கு நன்றி, நம் உழைத்துக்கொண்டே இருந்தால் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என எனது அம்மா கூறுவார்கள். அம்மா சொன்னது போல இப்போது இந்த விருது கிடைத்துள்ளது. ஆனால், இதைப் பார்க்க எனது அம்மா இல்லை என மேடையிலேயே கண் கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.