காவேரியை பழிவாங்க ராகினி எடுக்கும் விபரீத முடிவு.. மகாநதி இன்றைய எபிசோட்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தந்தையை இழந்த நான்கு சகோதரிகள் எப்படி வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் அவர்களின் வாழ்க்கையை சுற்றி இந்த சீரியல் நகர்கிறது. இந்த சீரியலில், ஹீரோ நிவின்- காவேரி இருவரும் காதலிக்கின்றனர். மற்றொரு பக்கம் பசுபதி காவேரி தந்தைக்கு துரோகம் செய்ததை காவேரி தெரிந்து கொள்கிறாள். மேலும், பசுபதி தன்னுடைய மகள் ராகினியை நிவினுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகிறார். பசுபதியை காவேரி அவமானப்படுத்தி விட்டதால், காவேரி குடும்பத்தை ஒழித்துக்கட்ட சரியான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

மகாநதி சீரியல்: மேலும், நர்மதா ஆப்ரேஷனுக்காக சகோதரியுடன் சென்னை வரும் விஜய் வீட்டில் வாடகைக்கு இருக்கிறாள். இந்த நேரத்தில் ஆப்ரேஷனுக்கான பணம் தொலைந்து போக, அந்த நேரத்தில் விஜய், பணத்தை நான் தருகிறேன். ஆனால், தன்னை ஒரு வருட கான்ட்ராக்ட் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறான். காவேரிக்கு பணத்தேவை இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
நேற்றைய எபிசோட்: இதையடுத்து மகாநிதி சீரியலில் நேற்று நிவினை பார்க்க வரும் ராகினி, காவேரி தனது கணவருடன் சந்தோஷமாக இருக்க நீ எப்படி அவளை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கேட்க, உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல, நிச்சயம் நானும் காவேரியும் திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல கடுப்பாகும் ராகினி. இது என்னவென்றே புரியலேயே, எதுக்கும் விஜய்யின் தம்பி அஜய்க்கு போன் செய்து வர சொல்கிறாள்.
ராகினி அழைத்ததால் இன்று எப்படியாவது அவள் மீது இருக்கும் காதலை சொல்லிவிட வேண்டும் என்று வருகிறான். காபி ஷாப்புக்கு வரும் அஜய்யிடம் விஜய் மற்றும் காவேரி குறித்து விசாரித்துக்கொண்டே இருக்கிறாள் ராகினி. இதையடுத்து, ராகினியின் கைபிடித்து, தான் காதலிக்கும் விஷயத்தை சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பழிவாங்க துடிக்கும் ராகினி: மகாநதி இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் தந்தை பசுபதியிடம் ராகினி, அஜய் தன்னை காதலிப்பதாக சொன்னதாகவும், அவரே தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் குண்டை தூக்கிப்போட டென்ஷனான பசுபதி, நீ நிவினை மறந்து திருமணம் செய்ய முடிவு எடுத்தது நல்ல விஷயம் தான், ஆனால், அஜய் வேண்டாம் நான் வேறு வரன் பார்க்கிறேன் என்று சொல்ல, ராகினி முடியவே முடியாது, நிவினை நான் தேடி தேடி காதலித்தேன். ஆனால், அஜய் என்னை தேடிவந்து காதலித்தான், அவனும் நல்ல பையன் தான். அது மட்டுமில்லாமல் அந்த வீட்டுக்கு நான் மறுமகளாக போனால் தான் நவினையும் காவேரியையும் பழிவாங்க முடியும் என்று விபரீதமாக முடிவு எடுக்கிறாள்.


Click it and Unblock the Notifications











