Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாயாடியானது இப்படித்தானாம்...
சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் வாயை பிடுங்கி எடுப்பதோடு, அவர்களை பேசவும் விடாமல் பொரிந்து தள்ளும் திவ்யதர்ஷினிக்கு மூன்று வயது வரை பேச்சு வராமலிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால்.. அதுதான் உண்மையாம். இதை திவ்யதர்ஷினியே கூறியுள்ளார்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருக்கும் திவ்யதர்ஷினி சுருக்கமாக டிடி என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது கலகலப்பான பேச்சுக்காகவே டிடி நடத்தும், காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்பாடி.. இந்த பொண்ணு வாயில மாட்டினா அவ்வளவுதான் என்று நினைக்கும் அளவுக்கு பொரிந்து தள்ளிவிடுவார் திவ்யதர்ஷினி.
தொகுப்பாளினி, பகுதி நேர பேராசிரியை என்று பன்முகங்கள் காட்டி ஜொலித்துவரும் டிடி, சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி "டெலி அவார்டு" நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளினியாக விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில், தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். "அவ்வளவுதான்.. இந்த பொண்ணுகிட்ட வாய் கொடுத்து மாட்டிக்கப்போராரு ஸ்ரீகாந்த்" என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இப்படி வாயாடி என்று பெயரெடுத்த டிடிக்கு மூன்றுவயது வரை பேச்சே வராதாம்.
இதை விஜய்டிவியில் சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய பிறகு டிடியே சொன்னார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கு மூன்றுவயது வரை பேச்சே வராமல் இருந்தது. 10ம் வகுப்பு படிக்கும்வரை மேடையில் ஏறி எந்த நிகழ்ச்சியும் செய்தது கிடையாது. என் தந்தைதான் என்னை ஊக்கப்படுத்துவார். ஆனால் எனக்கு பேசத்தெரியும் என்று தெரிந்துகொள்ளாமேல அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சின்னவயசுல பேசாமல் இருந்ததால்தான் மொத்தமா சேர்த்துவச்சி இப்போ பேசுறியா தாயி..!