Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாயாடியானது இப்படித்தானாம்...
சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் வாயை பிடுங்கி எடுப்பதோடு, அவர்களை பேசவும் விடாமல் பொரிந்து தள்ளும் திவ்யதர்ஷினிக்கு மூன்று வயது வரை பேச்சு வராமலிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால்.. அதுதான் உண்மையாம். இதை திவ்யதர்ஷினியே கூறியுள்ளார்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருக்கும் திவ்யதர்ஷினி சுருக்கமாக டிடி என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது கலகலப்பான பேச்சுக்காகவே டிடி நடத்தும், காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்பாடி.. இந்த பொண்ணு வாயில மாட்டினா அவ்வளவுதான் என்று நினைக்கும் அளவுக்கு பொரிந்து தள்ளிவிடுவார் திவ்யதர்ஷினி.
தொகுப்பாளினி, பகுதி நேர பேராசிரியை என்று பன்முகங்கள் காட்டி ஜொலித்துவரும் டிடி, சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி "டெலி அவார்டு" நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளினியாக விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில், தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். "அவ்வளவுதான்.. இந்த பொண்ணுகிட்ட வாய் கொடுத்து மாட்டிக்கப்போராரு ஸ்ரீகாந்த்" என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இப்படி வாயாடி என்று பெயரெடுத்த டிடிக்கு மூன்றுவயது வரை பேச்சே வராதாம்.
இதை விஜய்டிவியில் சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய பிறகு டிடியே சொன்னார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கு மூன்றுவயது வரை பேச்சே வராமல் இருந்தது. 10ம் வகுப்பு படிக்கும்வரை மேடையில் ஏறி எந்த நிகழ்ச்சியும் செய்தது கிடையாது. என் தந்தைதான் என்னை ஊக்கப்படுத்துவார். ஆனால் எனக்கு பேசத்தெரியும் என்று தெரிந்துகொள்ளாமேல அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சின்னவயசுல பேசாமல் இருந்ததால்தான் மொத்தமா சேர்த்துவச்சி இப்போ பேசுறியா தாயி..!
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
சீக்கிரமே திருமணம் ஆகப்போகுது.. திடீரென தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார்.. எங்கே போயிருக்காரு பாருங்க!