Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கோவை ரசிகைகளுக்கு அடித்தது ஜாக்பாட்… பாக்யலட்சுமி சீரியல் கொண்டாட்டம் !
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். இந்த சீரியலுக்கு குடும்பத் தலைவிகள் ஆஜராகி விடுகிறார்கள்.
இது இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாகவே இருந்து வருகிறது. வெளியே வேலைக்குச் செல்லாமல் வீட்டில் ஹவுஸ்ஃவைய்ப்பாக இருக்கும் பெண்கள் எத்தகைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் பாக்கியலட்சுமி.
பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக நடிகர் ஆர்யன், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
“மாறன்“ மாலை 5 மணிக்கு ஓடிடியில் ரிலீஸ்… படத்தை பார்க்க சுவாரசியமான 5 காரணம் !
பாக்யாவின் கணவர் கோபி, கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். பிடிக்காத மனைவியுடன் வாழ்ந்து வருவதாக பொய்யை கூறியே ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார் கோபி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துக் கொள்ள சொல்லி ராதிகா தரப்பில் அழுத்தம் தரப்படுகிறது. இதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய திட்டமிடும் கோபி, பாக்யாவை ஏமாற்றி கையெழுத்து வாங்கி நீதிமன்றத்திற்கும் அழைத்து சென்று விடுகிறார். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருகிறது.
இந்நிலையில், பாக்யலட்சுமியின் நடிகர்கள் மற்றும் குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு கோயம்புத்தூரில் உள்ள பெண்களுக்கு கிடைத்துள்ளது. தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் மேடையில் அசத்தலான நடிப்பைக் காண ரசிகர்கள் தயாராகி உள்ளனர். இன்று மாலை பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் கோவையில் உள்ள சிவாலயா ஆடிடோரியத்தில் பெண் ரசிகைகள் சந்திக்க உள்ளனர். அவர்களோடு சேர்ந்து மேடையில் பர்பாமென்ஸ் செய்ய உள்ளனர். மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் பெண்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் சூப்பர் சிங்கர் டீம் உட்பட அறந்தாங்கி நிஷாவும் பங்கேற்க உள்ளார். மேலும் எழிலாக நடித்து வரும் விஷால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு மாலை. சீரியலில் இருந்து பல நட்சத்திரங்கள் மற்றும் சில பிரபலமான முகங்கள் மற்றும் ஸ்டார் விஜய்யின் சூப்பர் சிங்கர் குழு ஆகியவை கோவையில் மேடையில் நேரடியாக பார்வையாளர்களை கவர தயாராக உள்ளன.