Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பிக் பாஸ் பைனலில் டிவி சேனல் செய்த ட்ரிக்ஸ்.. வீடியோவால் அம்பலம்.. பொங்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலேவில் விஜய் டிவி செய்த ஃபிராடுத்தனம் அம்பலமாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கையை கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகமும், விஜய் டிவி மீது மதுமிதாவும் மாறி மாறி போலிஸில் புகார் அளித்துக்கொண்டனர்.
கைதியை பின்னுக்கு தள்ளிய கவிலியா காதல்.. பிக் பாஸ் முடிந்தும் கெத்து காட்டும் கவின் - லாஸ்லியா!
அழைக்கப்படவில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த போது நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு இறுதியாக அழைத்து வரப்பட்டனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சரவணனும் மதுமிதாவும் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்படவில்லை.
கிரான்ட் பினாலே
அதேபோல் பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியின் போதும் மதுமிதாவுக்கும் சரவணனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
கைத்தட்டிய கணவர்
இதில் மதுமிதாவின் கணவரான மோசஸ் பங்கேற்று, முன் வரிசையில் அமர்ந்து கைத்தட்டுவது போன்ற காட்சி இருந்தது. இதனை பார்த்த பார்வையாளர்கள் அடடா விஜய் டிவி மதுமிதா குடும்பத்தினரை ஃபைனலுக்கு அழைத்துள்ளதே என சந்தோஷமடைந்தனர்.
பழைய வீடியோ
இந்நிலையில் அந்த வீடியோ விஜய் டிவி போட்ட பழைய வீடியோ என கண்டுபிடித்துள்ள நெட்டிசன்ஸ், விஜய் டிவியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்றது முதல் நாள் ஆரம்ப விழாவில் என தெரிய வந்துள்ளது.
கண்டுபிடித்த நெட்டிசன்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் நடனத்தின் போது மோசஸ் அதனை பார்த்த கைத்தட்டுவது போன்று காண்பிக்கப்பட்டது. இதனை ஏமாற்று வேலை என்று கண்டுபிடித்த நெட்டிசன்கள், மதுமிதா வெளியேற்றப்பட்டதில் ஏதோ வில்லங்கம் இருப்பது, இதிலேயே தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.
|
வருத்தமாக உள்ளது
மேலும் விஜய் டிவி மக்களை ஏமாத்திவிட்டது என்பதை பார்க்கும் போது உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. மதுமிதாவின் கணவர் நிகழ்ச்சியில் பங்கேற்காத போது அவரை காண்பித்து விஜய் டிவி மக்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார்கள்.
|
மோசம்
மேலும் விஜய் டிவிக்கு ஒரு குறும்படம் என்றும் விஜய் டிவியின் மோசம் செய்துவிட்டதாகவும், அந்த டிவி சேனலின், இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.