Don't Miss!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- News காமராஜர், ஜெயலலிதா, மூப்பனார்! மாற்று கட்சி தலைவர்கள் பெயரை சொல்லி.. மோடி பிரச்சாரம்! கவனிச்சீங்களா?
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பிக் பாஸ் பைனலில் டிவி சேனல் செய்த ட்ரிக்ஸ்.. வீடியோவால் அம்பலம்.. பொங்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலேவில் விஜய் டிவி செய்த ஃபிராடுத்தனம் அம்பலமாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கையை கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகமும், விஜய் டிவி மீது மதுமிதாவும் மாறி மாறி போலிஸில் புகார் அளித்துக்கொண்டனர்.
கைதியை பின்னுக்கு தள்ளிய கவிலியா காதல்.. பிக் பாஸ் முடிந்தும் கெத்து காட்டும் கவின் - லாஸ்லியா!
அழைக்கப்படவில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த போது நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு இறுதியாக அழைத்து வரப்பட்டனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சரவணனும் மதுமிதாவும் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்படவில்லை.
கிரான்ட் பினாலே
அதேபோல் பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியின் போதும் மதுமிதாவுக்கும் சரவணனுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
கைத்தட்டிய கணவர்
இதில் மதுமிதாவின் கணவரான மோசஸ் பங்கேற்று, முன் வரிசையில் அமர்ந்து கைத்தட்டுவது போன்ற காட்சி இருந்தது. இதனை பார்த்த பார்வையாளர்கள் அடடா விஜய் டிவி மதுமிதா குடும்பத்தினரை ஃபைனலுக்கு அழைத்துள்ளதே என சந்தோஷமடைந்தனர்.
பழைய வீடியோ
இந்நிலையில் அந்த வீடியோ விஜய் டிவி போட்ட பழைய வீடியோ என கண்டுபிடித்துள்ள நெட்டிசன்ஸ், விஜய் டிவியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்றது முதல் நாள் ஆரம்ப விழாவில் என தெரிய வந்துள்ளது.
கண்டுபிடித்த நெட்டிசன்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் நடனத்தின் போது மோசஸ் அதனை பார்த்த கைத்தட்டுவது போன்று காண்பிக்கப்பட்டது. இதனை ஏமாற்று வேலை என்று கண்டுபிடித்த நெட்டிசன்கள், மதுமிதா வெளியேற்றப்பட்டதில் ஏதோ வில்லங்கம் இருப்பது, இதிலேயே தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.
|
வருத்தமாக உள்ளது
மேலும் விஜய் டிவி மக்களை ஏமாத்திவிட்டது என்பதை பார்க்கும் போது உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. மதுமிதாவின் கணவர் நிகழ்ச்சியில் பங்கேற்காத போது அவரை காண்பித்து விஜய் டிவி மக்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார்கள்.
|
மோசம்
மேலும் விஜய் டிவிக்கு ஒரு குறும்படம் என்றும் விஜய் டிவியின் மோசம் செய்துவிட்டதாகவும், அந்த டிவி சேனலின், இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.