Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபுதேவா நடனப்போட்டியில் 40 லட்சம் வீடு வெல்லப்போவது யார்?
200 போட்டியாளர்கள்... ஆக்ரோசமான நடனம்... என ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மாலை நேரத்தில் விஜய் டிவியில் ரசிகர்களை மகிழ்வித்த போட்டியளர்கள் இன்று இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சீசன் 2 நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 200 சிறந்த நடன போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் நடுவர்கள்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான போட்டிகள். பல கட்டங்கள் என நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடனப்போட்டியின் நாயகன் பிரபுதேவாவும் அவ்வப்போது தோன்றி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.
நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் நடிகை சங்கீதா ஆகியோர் போட்டியின் நடுவர்களாக பங்கேற்று சிறந்த நடனக்கலைஞர்களை தேர்வு செய்தனர். இறுதிச்சுற்றில் நடனமாட கார்த்திக், விஜய் மற்றும் ஜாபர் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது போட்டியாளரை தேர்வு செய்வதற்கான வைல்டுகார்டு சுற்று நேற்று நடைபெற்றது. 10 போட்டியாளர்கள் இந்த சுற்றில் நடனமாடினர். ஒவ்வொரு போட்டியாளரும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் தங்களின் சிறந்த பங்களிப்பை செய்தனர் என்றே கூறவேண்டும். நடுவர்களுக்குத்தான் யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால் நான்காவது போட்டியாளர் யார் என்பதை அறிய ஒருவாரம் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 11ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், அசோக்ராஜா, காயத்ரி ரகுராம், நடிகர் பரத், நடிகை சங்கீதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இரண்டு சுற்று நடனப் போட்டியில் இறுதிப்போட்டியாளர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். இவர்களில் சிறப்பாக நடனமாடிய ஒருவரை வெற்றியாளராக நடிகரும், நடனஇயக்குநருமான பிரபுதேவா அறிவிப்பார். அவருக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்