Don't Miss!
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபுதேவா நடனப்போட்டியில் 40 லட்சம் வீடு வெல்லப்போவது யார்?
200 போட்டியாளர்கள்... ஆக்ரோசமான நடனம்... என ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று மாலை நேரத்தில் விஜய் டிவியில் ரசிகர்களை மகிழ்வித்த போட்டியளர்கள் இன்று இறுதிப் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சீசன் 2 நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 200 சிறந்த நடன போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் நடுவர்கள்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான போட்டிகள். பல கட்டங்கள் என நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் நடனப்போட்டியின் நாயகன் பிரபுதேவாவும் அவ்வப்போது தோன்றி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.
நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் நடிகை சங்கீதா ஆகியோர் போட்டியின் நடுவர்களாக பங்கேற்று சிறந்த நடனக்கலைஞர்களை தேர்வு செய்தனர். இறுதிச்சுற்றில் நடனமாட கார்த்திக், விஜய் மற்றும் ஜாபர் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான்காவது போட்டியாளரை தேர்வு செய்வதற்கான வைல்டுகார்டு சுற்று நேற்று நடைபெற்றது. 10 போட்டியாளர்கள் இந்த சுற்றில் நடனமாடினர். ஒவ்வொரு போட்டியாளரும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் தங்களின் சிறந்த பங்களிப்பை செய்தனர் என்றே கூறவேண்டும். நடுவர்களுக்குத்தான் யாரை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால் நான்காவது போட்டியாளர் யார் என்பதை அறிய ஒருவாரம் வரை காத்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 11ம் தேதி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், அசோக்ராஜா, காயத்ரி ரகுராம், நடிகர் பரத், நடிகை சங்கீதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இரண்டு சுற்று நடனப் போட்டியில் இறுதிப்போட்டியாளர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும். இவர்களில் சிறப்பாக நடனமாடிய ஒருவரை வெற்றியாளராக நடிகரும், நடனஇயக்குநருமான பிரபுதேவா அறிவிப்பார். அவருக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படுகிறது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!