Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கிராமத்து காதல் கதை… மண் மணம் மாறாத ஆண்டாள் அழகர்
கலகலப்பாக இருக்கிறது ஆண்டாள் அழகர் சூட்டிங் ஸ்பாட். அத்தை மகன், மாமன் மகள் காதல் எல்லாம் கிராமங்களில் பிரபலம். கிராமத்து காதல் கதையை மண் மணம் மாறாமல் விஜய் டிவியில் கொடுத்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஆண்டாள் அழகர் தொடரின் இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன்.
தாயுமானவன் தொடரில் தந்தையில் பாசத்தை உணர்த்திய இயக்குநர், ஆண்டாள் அழகரில் அண்ணன், தங்கை, அக்காள், தம்பி என்ற பாசப்பிணைப்பு, நட்பு, இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகை, என அனைத்தையும் மண் மணம் மாறாமல் விளக்கியுள்ளார்.
குடும்ப பகை
இந்தியா - பாகிஸ்தான் போல எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் கலெக்டர் குடும்பம், கவுன்சிலர் குடும்பத்திற்கு இடையேயான சண்டை தலைமுறையை தாண்டியும் நீடிக்கிறது. இதற்குக் காரணம் காதல் திருமணம்தான். இந்த இரு குடும்பத்திலும் வாரிசுகளான சக்திவேல் - அழகர் இடையேயான நட்பு சொந்தம் என்பதைத்தாண்டி நீடிக்கிறது.
ஆண்டாள் – அழகர்
சக்திவேலின் தங்கை ஆண்டாள் மீது அழகருக்கு ஏற்படும் காதல் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. டாக்டருக்கு படித்திருக்கும் ஆண்டாளுக்கும் அழகர் மீது காதல் ஏற்பட நட்புக்காக காதலை மறைக்கும் நிலை ஏற்படுகிறது.
திடீர் திருமணம்
எதிர்பாராத தருணத்தில் ஆண்டாளுக்கும் அழகருக்கும் இடையே திருமணம் நடைபெற, கோபத்தில் அழகரின் அக்கா ரேவதியை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்கிறான் சக்திவேல்.
ஆகாத மருமகள்கள்
இருவர் வீட்டிலும் ஆகாத மருமகள்களாக நுழைகின்றனர் ஆண்டாளும், ரேவதியும். சக்திவேலுடன் பிடிக்காமல் வாழ்ந்தாலும், எப்படியாவது கணவனை பெரியாளாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் சீண்டுகிறாள் ரேவதி. அதேபோல ஆண்டாளும் அழகருடன் சந்தோசமாக வாழும் தருணத்தில் எதிர்பாரத சிக்கல்கள் ஏற்பட இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.
அடுத்தது என்ன?
சுவாரஸ்யமாக செல்லும் ஆண்டாள் அழகர் தொடரில் அடுத்து நடக்க இருப்பது எதிர்பாராத திருப்பம் என்கிறார் இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன். சிறந்த டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை ஆண்டாள் எப்படி நிஜமாக்குகிறாள்? அதேபோல தன்னுடைய கலெக்டர் கனவை மாமனார் வீட்டில் இருந்து கொண்டு ரேவதி நிஜமாக்குவது எப்படி என்பதுதான் இனி சீரியலின் கதை என்கிறார்.
வக்கீலாகும் அழகர்
படிக்காமல் ஊரைச்சுற்றிக்கொண்டிருந்த அழகரை படிக்க வைத்து சிறந்த வழக்கறிஞராக மாற்றுகிறாள் ஆண்டாள். படிப்படியாக தனது மாமனார் வீட்டிலும் நல்ல பெயரை சம்பாதிக்கிறாள்.
சிறந்த டாக்டர்
கிராமத்தில் ஒரு மருத்துவமனை தொடங்கி மக்களுக்கு சேவை செய்து சிறந்த டாக்டர் என்று பெயரெடுத்து பெற்றோருக்கும் சிறந்த மகளாக பெயரை சம்பாதித்து கொடுக்கிறாள் ஆண்டாள்.
கலெக்டராகும் ரேவதி
அதேபோல மாமனார் உதவியோடு கலெக்டர் ஆகும் ரேவதி, தனது கணவன் சக்திவேலை சிறந்த அரசியல்வாதியாக மாற்றுவதோடு, அமைச்சர் அளவிற்கு உயர்த்துகிறாள்.
நட்பும் காதலும்
திருமணத்திற்குப் பின்னர் பிரிந்து எதிரும் புதிருமாக இருக்கும் நண்பர்கள் சக்திவேலும் அழகரும் இணைந்தார்களா? கலெக்டர் குடும்பமும், கவுன்சிலர் குடும்பமும் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் பரபரப்பான திருப்பம் என்கிறார் பிரான்சிஸ் கதிரவன்.
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?