Don't Miss!
- News
"சீக்ரெட் மெசேஞ்.." கஞ்சா கும்பல் தப்பிக்க உதவிய எஸ்ஐ.. தட்டி தூக்கிய போலீஸ்! கோவையில் அதிரடி கைது
- Lifestyle
ஆண்களே! பெண்களின் உச்சக்கட்டம் பற்றி நீங்க நினைக்கிறது தப்பாம்... அப்ப நீங்க எப்படி செயல்படனும் தெரியுமா?
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பாக்கியாவிற்கு எதிராக சதி.. ராதிகாவையும் தூண்டிவிடும் கோபி!
சென்னை : பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்தத் தொடரில் தன்னுடைய மனைவி பாக்கியா தன்னைவிட அதிகமாக முன்னேறிவிடக்கூடாது அவர் விட்ட சவாலில் ஜெயிக்கக்கூடாது என்ற மனநிலையில் கோபி காணப்படுகிறார்.
இதனிடையே பாக்கியாவிற்கு கிடைக்கவுள்ள கேன்டீன் கான்டிராக்டை குலைக்கும்படி ராதிகாவிடம் சொல்கிறார்.
ராதிகா
வீட்டில்
இனியா..
கலக்கத்தில்
பாக்கியா
செய்த
செயல்..
பாக்கியலட்சுமி
சீரியலில்
ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்கிறார் கோபி. முன்னதாக தான் வீட்டை விட்டு வெளியேற காரணமான தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமியிடம் தான் வீட்டை கட்ட செலவழித்த 40 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க கேட்கிறார்.

சவாலை ஏற்கும் பாக்கியா
பாக்கியலட்சுமியும் அந்த சவாலை ஏற்கிறார். ஒரு வருடத்திற்குள் அந்த பணத்தை கோபியிடம் திருப்பி கொடுப்பதாக கூறுகிறார் பாக்கியா. தன்னுடைய மாமனார், மாமியார், மகன்கள் என குடும்பத்தினர் அனைவரையும் கவனிக்கும் பொறுப்புடன் இந்த 40 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்கும் பொறுப்பும் அவருக்கு சேர்கிறது. இதையொட்டி தனக்கு தெரிந்த சமையலை வைத்தே தன்னுடைய குடும்பத்தை முன்னேற்றுகிறார்.

பாக்கியாவின் சமையல் கான்டிராக்ட்
சமையல் கான்டிராக்ட் செய்து அதன்மூலம் குடும்பத்தை பராமரிக்கிறார் பாக்கியா. தொடர்ந்து ராதிகாவின் அலுவலகத்தின் கேன்டீன் கான்டிராக்டும் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் முன்பணமாக 7 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் எம்டி கூறுகிறார். இதனால் மனமுடைந்தாலும் தன்னுடைய மருமகள் கொடுக்கும் தைரியத்தால் அதை ஒப்புக் கொள்கிறாள் பாக்கியா.

கேன்டீன் கான்டிராக்ட்
இந்த அலுவலகம் ராதிகாவின் அலுவலகம் என்பது தெரியாமல் அந்த கேன்டீன் கான்டிராக்ட்டை எடுக்கிறார் பாக்கியா. இதுகுறித்து கேள்விப்படும் ராதிகா, தன்னுடைய கணவன் கோபியிடம் இதை கூறுகிறார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கக்கூடாது என்றும் அதை குலைக்க வேண்டியவற்றை செய்யுமாறும் கோபி கூறுகிறார். ராதிகாவும் இதற்கு உடன்படுகிறார்.

பாக்கியாவிற்கு எதிராக கோபி சதி
பாக்கியாவிற்கு அந்த கான்டிராக்ட் கிடைப்பது குறித்து முன்னதாக எம்டியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ராதிகா, அந்த கான்டிராக்ட் அவருக்கு பொருத்தமாக இருந்தால் கொடுத்துவிடலாம் என்பதாகத்தான் கூறியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய மனைவி பாக்கியாவிற்கு எதிரான மனநிலையை ராதிகாவிற்கு கோபி கொடுக்கிறார். இதன்மூலம் பாக்கியா எந்தவகையிலும் தன்னை முந்திவிடக்கூடாது என்ற அவரது மனநிலை வெளிப்படுகிறது.
-
Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்ற அசீம்.. மக்கள் நாயகன்!
-
Bigg Boss Tamil 6: முதல் முறையா 3 நபர்களும் மேடையில்.. வீட்ல இருந்து எப்படி பறந்து வராங்க பாருங்க!
-
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!