கணவன் கேட்ட விவாகரத்து.. கொடுக்க முடிவெடுத்த பாக்கியா.. என்ன இப்படி ஆயிடுச்சு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி.

இந்தத் தொடரில் கணவன் குறித்து உண்மை தெரியவந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாக்கியா.

இதேபோல கோபியின் உண்மையான குடும்பத்தினர் குறித்து அறிந்துக் கொண்ட ராதிகாவும் மும்பை செல்லும் தன்னுடைய முடிவில் உறுதியாக காணப்படுகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முன்னணி மற்றும் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு டிஆர்பியில் முதலிடம் பிடித்த நிலையில் கடந்த வாரத்தில் சற்றே இறங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சன் டிவியின் கயல் தொடர் உள்ளது.

கோபி அதிரடி

கோபி அதிரடி

கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என்ற மூன்று கேரக்டர்களின் முக்கோண காதல் மற்றும் வாழ்க்கையை சொல்லும் இந்தத் தொடரில் குடும்பத்தையும் விட முடியாமல், ராதிகாவையும் விட்டுத்தர விரும்பாலும் போராடும் குடும்பத்தலைவனாக கோபி அதிரடியாக நடித்து வருகிறார்.

கோபி கேரக்டரின் நெகட்டிவ் ஷேட்

கோபி கேரக்டரின் நெகட்டிவ் ஷேட்

அவரது கேரக்டரில் நெகட்டிவ் ஷேட் உள்ள நிலையிலும், அவரது கேரக்டரை அனைவரும் விரும்பத்தான் செய்கின்றனர். அந்த வகையில் திருட்டு முழி முழித்துக் கொண்டு தன்னுடைய செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு வருகிறார் கோபி. ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரமாக ராதிகா மற்றும் பாக்கியாவிடம் மாட்டிக் கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

குடும்பத்திற்கு தெரிந்த காதல்

குடும்பத்திற்கு தெரிந்த காதல்

இன்னும் சிறிது காலங்களுக்கு அவரது தகிடு தத்தங்களை இயக்குநர் நீட்டிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து ராதிகா மற்றும் பாக்கியாவிடம் மாட்டிக்கொண்டு மத்தளமாக மாறியுள்ளார் கோபி. ஆனால் அவருக்கு இது வேண்டும் என்றும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவே கோபியின் கேரக்டருக்கான வெற்றி.

கண்கலங்கும் பாக்கியா

கண்கலங்கும் பாக்கியா

இந்நிலையில் கோபியின் காதல் குறித்து அறிந்துக் கொள்ளும் பாக்கியா இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் கண்கலங்குகிறார். அவரது மனவேதனை நம்முடைய சொசைட்டியில் அதிகமான பெண்கள் அனுபவிக்கும் கொடுமைதான். அதை மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் பாக்கியா கேரக்டரில் நடித்துவரும் சுசித்ரா.

வீட்டைவிட்டு வெளியேறும் பாக்கியா

வீட்டைவிட்டு வெளியேறும் பாக்கியா

இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் பாக்கியா. தான் செய்தது சரியா என்றுகூட தெரியாமல் கண்கலங்கிவந்த அவர், தற்போது தன்னுடைய மகன், எழிலுடன் பேசிய பின்பு தெளிவு பெறுகிறார். தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துப்பார்க்க போகிறாரா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.

அலங்காரத்தில் பாக்கியா

அலங்காரத்தில் பாக்கியா

இதனிடையே தற்போதைய எபிசோடில் திரும்பவும் வீட்டிற்கு வரும் பாக்கியாவை குடும்பத்தினர் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். அவர் தனது ரூமிற்கு சென்று குளித்து முடித்துவிட்டு மிகவும் மங்களகரமாக, அழகான உடையுடன், அதிகமான நகைகளும் கீழே இறங்கி வருகிறார்.

கணவன் கேட்ட விவாகரத்து

கணவன் கேட்ட விவாகரத்து

இதையடுத்து அவரை கேள்விக்கணைகளுடன் குடும்பத்தினர் எதிர்நோக்குகின்றனர். அப்போது, இன்றைய தினம் விவாகரத்து வழக்கு வருகிறது. அதற்கு போகவேண்டும் என்று கூறி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். தன்னுடைய கணவன் தன்னிடம் கேட்ட விவாகரத்தை தான் அவருக்கு கொடுப்பதுதான் நியாயம் என்றும் பாக்கியா கூறுகிறார்.

ப்ரமோ வெளியீடு

ப்ரமோ வெளியீடு

இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அவர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோதே பேச்சில் நிதானமும், நடவடிக்கைகளில் வைராக்கியமும் தென்பட்டது. பாக்கியா மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரை எதிர்கொள்ளாமல் இருந்த கோபிக்கே பாக்கியாவின் இந்த முடிவு அதிர்ச்சியை தருகிறது. இந்தப் ப்ரமோவின் அடுத்தடுத்த எபிசோட்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X