Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ராதிகாவை காப்பாற்ற போராடும் கோபி... அப்ப பாக்கியா நிலைமை?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக உள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரின் அடுத்தடுத்த திருப்பங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. டிஆர்பியிலும் இந்தத் தொடர் சிறப்பான இடத்தில் உள்ளது. தற்போது முக்கியமான கட்டத்தில் தொடர் உள்ளது. கோபி எடுக்கப்போகும் முக்கிய முடிவு தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் காணப்படுகிறது. இதில் மனைவியை ஏமாற்றி தனது காதலியை திருமணம் செய்ய தொடர்ந்து கதையின் நாயகன் கோபி முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் தற்போது தொடர் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
காவல்நிலையத்தில் மனைவி, காதலி
மனைவி பாக்கியா மற்றும் காதலி ராதிகா என இருவரும் ஜெயிலில் உள்ள நிலையில் நாயகன் கோபி தனது காதலியை காப்பாற்ற வழக்கறிஞரை சந்திக்கிறார். முன்னதாக பாக்கியா சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்டுதான் ஆசிரமத்து குழந்தைகள் மயங்கியதாக அவர்தான் போலீசிடம் போட்டுக் கொடுத்தார்.
பாக்கியாவை மாட்டிவிட்ட கோபி
இதன்மூலம் போலீசார் தனது காதலி ராதிகாவை விசாரணைக்கு அழைத்து செல்வதை தவிர்க்க அவர் திட்டமிட்ட நிலையில், போலீசார், ராதிகா, பாக்கியா இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆசிரமத்தில் குழந்தைகளின் ரிப்போர்ட் வந்தவுடன்தான் இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்கியாவிடம் ராதிகா சண்டை
தனது அம்மா விசாரணைக்காக காவல்நிலையத்தில் உள்ளதை அறிந்து எழில், இனியா உள்ளிட்டவர்கள் கதறி அழுகின்றனர். இதையடுத்து ஆறுதலுக்காக ராதிகாவிடம் பாக்கியா பேசப்போக, அவர்களுக்குள்ளும் சண்டை வருகிறது. இப்படியாக கதை செல்கிறது. பரபரப்பான இந்த தருணத்தில் தன்னுடைய காதலியை காப்பாற்ற நினைக்கும் கோபியின் செயல் ரசிகர்களிடையே கோபத்தை வரவழைத்துள்ளது.
மனைவியை காப்பாற்றாத கோபி
ஆசிரமத்திற்கு சாப்பாடு அளிக்கப்பட்ட விஷயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வரும் வாரங்களில் பதில் கிடைக்கும். தன்னுடைய மனைவியை காப்பாற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத கோபியின் செயல்பாடு குறித்து குடும்பத்தினருக்கு தெரியவருமா என்பதும் வரும் நாட்களில் தெரியும்.