நான் பால் குடிக்கற குழந்தை இல்லை.. வெண்பாவிடம் மல்லுகட்டும் கண்ணம்மா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் சமீப காலங்களில் அதிகமான கவனத்தை பெற்று வருகிறது பாரதி கண்ணம்மா.
இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இதனிடையே வெண்பாவின் திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்துவரும் நிலையில் திருமணத்திற்கு கண்ணம்மாவும் வருகிறார்.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் அடுத்தடுத்து பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களை கொடுத்து வருகிறது. மீண்டும் டிஆர்பியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள இந்தத் தொடரில் தற்போது வெண்பாவின் திருமண ஏற்பாடுகள் களைகட்டியுள்ளது.

பாரதியை மிரட்டிய வெண்பா
பாரதியை மிரட்டி தன்னை திருமணம் செய்ய சம்மதம் வாங்கியுள்ளார் வெண்பா. தான் அவரை திருமணம் செய்ய எந்தெந்த வகையில் வேலை செய்துள்ளார் என்பதையும் ஏறக்குறைய பாரதிக்கு புரிய வைத்துள்ள வெண்பா, தன்னுடைய அம்மாவின் விருப்பப்படி ரோகித்தை திருமணம் செய்துக் கொள்ளவும் சம்மதிக்கிறார்.

பாரதியின் திட்டம்
ஆனால் கடைசி நேரத்தில் பாரதியை திருமணம் செய்யவே திட்டமிட்டு அவர் காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டிற்காக காத்திருக்கும் பாரதி, அந்த ரிசல்ட்டில் தன்னுடைய குழந்தைகள் ஹேமா மற்றும் லட்சுமி என்பது தெரியவந்தால் கண்ணம்மாவுடன் இணையவும் இல்லையென்றால் வெண்பாவை திருமணம் செய்யவும் முடிவெடுக்கிறார்.

ரோகித் -வெண்பா திருமணம்
ஒரு பக்கம் ரோகித் -வெண்பா திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வரும் நிலையில், அந்த திருமணத்திற்கு வரும் கண்ணம்மா, வெண்பாவிடம் அவரது திருமணம் நடக்குமா அல்லது அவர் வேறு திட்டம் வைத்திருக்கிறாரா என்பதை அறியவே தான் அந்த திருமணத்திற்கு வந்ததாக வெண்பாவிடம் கூறுகிறார்.

உண்மையை சொல்லும் கண்ணம்மா
தொடர்ந்து அவர் ரோகித்தை திருமணம் செய்வார் என்பதை யார் வேண்டுமானாலும் நம்பலாம், ஏன் அவரது அம்மா கூட நம்பலாம் ஆனால் அதை நம்ப தான் பால் குடிக்கும் குழந்தை இல்லை என்றும் கூறுகிறார். இந்த திருமணத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பதைபதைக்கும் வெண்பா
திருமணத்திலிருந்து வெண்பா வெளியேறலாம், கடைசி நேரத்தில் வேறு யாரையாவது திருமணம் செய்யலாம், ஆனால் ரோகித்தை அவர் திருமணம் செய்ய மாட்டார் என்பது தனக்கு தெரியும் என்றும் கண்ணம்மா கூறுகிறார். இதையடுத்து வெண்பா பதைபதைக்கிறார். கண்ணம்மாவிற்கு தன்னுடைய திட்டம் எப்படி தெரிந்தது என்று முழிக்கிறார்.

பாரதி கண்ணம்மா புதிய ப்ரமோ
இப்படியாக தற்போது வெளியாகியுள்ள தொடரின் புதிய ப்ரமோவில் காணப்படுகிறது. இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், வெண்பா -ரோகித் திருமணம் நடந்தால் மட்டுமே வெண்பா, பாரதி -கண்ணம்மா மீண்டும் சேரவிடுவார். ஆனால் தற்போது வரை பாரதியை திருமணம் செய்யும் விருப்பத்துடனே வெண்பா காணப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











