Don't Miss!
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
எப்ப வீட்டை விட்டு போகப்போறே.. மாமியாரின் கேள்வியால் சஞ்சலமடையும் காவ்யா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடர்.
இந்தத் தொடரில் சூழ்நிலை காரணமாக ஜோடி மாறி திருமணம் நடைபெற்ற நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு எபிசோட்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே தன்னுடைய மகனுக்கு நல்லது செய்வதாக நினைத்து காவ்யாவை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார் அவரது மாமியார் பார்வதி.
வாரிசு பேனருடன் சபரிமலையில் தரிசனம் செய்த விஜய் ரசிகர்கள்.. ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்த புகைப்படம்!
ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2. இதன் முதல் சீசன் மிகசிறப்பாக அமைந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசனும் பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. திருமணத்தின்போது மணப்பெண் பிரியா கடத்தப்பட அவருக்கு பதிலாக அவரது தங்கை காவ்யா மணப்பெண்ணாகிறார். முன்னதாக அவர், மணமகனின் தம்பி ஜீவாவை காதலிக்கிறார்.
ஜோடி மாறியதால் குழப்பம்
பார்த்தியை காவ்யா மணந்த நிலையில், அடுத்ததாக பார்த்தியின் தம்பியும், காவ்யாவின் காதலனுமான ஜீவா மணக்கும் சூழ்நிலைக்கு ப்ரியா தள்ளப்படுகிறார். இவ்வாறு ஜோடி மாறி திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பதை கதைக்களமாக கொண்டு இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
60ம் கல்யாணத்தில் குழப்பம்
இதனிடையே, திருமணத்திற்கு முன்பு ஜீவாவை காதலிக்கும் காவ்யா, அவருடன் ஹோட்டல் ஒன்றில் தங்க நேரிட, அதை பார்த்து அட்வைஸ் செய்கிறார் அதன் நிர்வாகி. இதனிடையே ஜீவாவின் அப்பா அம்மாவிற்கு 60ம் கல்யாணம் நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் அந்த ஹோட்டல் நிர்வாகி வர, அதைப்பார்த்து அச்சமடையும் காவ்யா அந்த திருமணத்தில் இருந்து தன்னுடைய மாமியாரிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.
ஜோடி மாறியதால் குழப்பம்
பார்த்தியை காவ்யா மணந்த நிலையில், அடுத்ததாக பார்த்தியின் தம்பியும், காவ்யாவின் காதலனுமான ஜீவா மணக்கும் சூழ்நிலைக்கு ப்ரியா தள்ளப்படுகிறார். இவ்வாறு ஜோடி மாறி திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் தங்களது மனதை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பதை கதைக்களமாக கொண்டு இந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
60ம் கல்யாணத்தில் குழப்பம்
இதனிடையே, திருமணத்திற்கு முன்பு ஜீவாவை காதலிக்கும் காவ்யா, அவருடன் ஹோட்டல் ஒன்றில் தங்க நேரிட, அதை பார்த்து அட்வைஸ் செய்கிறார் அதன் நிர்வாகி. இதனிடையே ஜீவாவின் அப்பா அம்மாவிற்கு 60ம் கல்யாணம் நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் அந்த ஹோட்டல் நிர்வாகி வர, அதைப்பார்த்து அச்சமடையும் காவ்யா அந்த திருமணத்தில் இருந்து தன்னுடைய மாமியாரிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.
நிற்கும் 60ம் கல்யாணம்
அவரின் இந்த செயலால் திருமணம் நிற்கிறது. தன்னுடைய மாமியார் பார்வதியிடம் காவ்யா திருமணத்திற்கான தாலியை கொடுத்து விட்டு செல்ல, அதை மறைக்கிறார் பார்வதி. இதனால் அவமானத்திற்கு உள்ளாகிறார் பார்த்தி. இதையடுத்து மீண்டும் காவ்யா வீட்டிற்கு வர, அவரை நிற்கவைத்து குடுமபத்தினர் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். கோபத்தின் உச்சிக்கு செல்லும் பார்த்தி, காவ்யா கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார்.
பொறுப்பேற்கும் மாமியார்
இதையடுத்து காவ்யாவிடம் பேசும் மாமியார், தான் செய்தது அனைத்தும் தவறு என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால் பார்த்தியின் நல்வாழ்க்கையை கருத்தில் கொண்டே தான் அவ்வாறு நடந்துக் கொண்டதாகவும், அப்போதுதான் பார்த்தி காவ்யாவை வெறுத்து விவாகரத்து செய்வான் என்று தான் நினைத்ததாகவும் கூறுகிறார். இதையடுத்து பார்த்தி கோபத்தில் உள்ள இந்த நிலையில் காவ்யா வீட்டை விட்டு சென்றாலும் அவன் சமாதானம் அடைந்துவிடுவான் என்றும் கூறுகிறார்.
காவ்யா வீட்டைவிட்டு போக வற்புறுத்தல்
இதையடுத்து காவ்யாவை ஒட்டுமொத்த குடும்பமும் வெறுக்கும் இந்த நிலையில், அவர் வீட்டை விட்டு செல்வது சரியானது என்றும், எப்போது அவர் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்றும் கேட்டு தொடர்ந்து நச்சரிக்கிறார். இதையடுத்து தடுமாறினாலும் தீர்க்கமாக பேசுகிறார் காவ்யா. தன்மீது அவப்பெயர் உள்ள இந்த நிலையில் தான் அதோடு வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று தெரிவிக்கிறார்.
நல்ல முடிவை எடுக்க கோரிக்கை
ஆனால் பார்த்தியின் நல்வாழ்க்கைக்காக மட்டுமின்றி காவ்யாவிற்காகவும்தான் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தான் எதை செய்தாலும் அதை காவ்யாவிற்காகவும் யோசித்தே தான் செய்வேன் என்றும் கூறும் பார்வதி, நடந்த அனைத்திற்கும் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் காவ்யாவிடம் கெஞ்சிக் கேட்கிறார். இத்துடன் சீரியலின் தற்போதைய ப்ரமோ நிறைவடைந்துள்ளது.