Don't Miss!
- Sports
ஓ இதுதான் காரணமா...?? பும்ராவிடம் கூறிய ஸ்பெஷல் கேப்டன்சி அட்வைஸ்.. டிராவிட் வெளிப்படை பேச்சு!
- Finance
'இந்த' துறையில் ரூ.30 கோடி-யா.. அசத்தும் ஈரோடு ஆர்த்தி..!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Automobiles
உங்க போர்டிங் பாஸில் SSSS என இருந்தால் அவளோதான்... இதுதான் அதோட அர்த்தமா? இனி கவனமா இருக்கணும்!
- News
நாட்டிலேயே எளிமையான முதல்வர் ஸ்டாலின்.. ஏற்றத்தாழ்வே காட்ட மாட்டாரு - அமைச்சர் பி.மூர்த்தி புகழாரம்
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
என்னது 150 தங்கச்சியா?...பின்ன இப்படி இருந்தா எப்படி ‘லவ்’வ சொல்வாங்க?...நீயா நானா சுவாரஸ்யம்
சென்னை : விஜய் டிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளையும் கடந்து வெற்றிகரமான ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரமும் புத்தம் புதிய தலைப்புடன் ரசிகர்களை சந்திக்க வருகிறார் கோபிநாத்.
பாஸான 'டான்'... முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

நீயா நானா நிகழ்ச்சி
விஜய் டிவியில் எப்போதுமே நிகழ்ச்சிகளை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் 10 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது நீயா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒரே தொகுப்பாளராக கோபிநாத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

விவாத நிகழ்ச்சிகளின் முன்னோடி
வாரந்தோறும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு, அதில் உள்ள சாதக பாதகங்களை இந்த நிகழ்ச்சி அலசுகிறது. விசுவின் அரட்டை அரங்கம், அகட விகடம் மற்றும் லியோனி, சாலமன் பாப்பையா ஆகியோரின் பட்டிமன்றங்கள்தான் விவாத நிகழ்ச்சிகளாக அறியப்பட்ட தமிழ் ரசிகர்களிடையே "புது ஃப்ளேவரை" அள்ளித் தெளித்தது நீயா நானா. எனவேதான், தற்போதுள்ள விவாத நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் முன்னோடியாக நீயா நானா நிகழ்ச்சி உள்ளது. நிகழ்ச்சியின் சிறப்பான தொகுப்பாளரான கோபிநாத், இந்த நிகழ்ச்சிக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

புதிய ப்ரமோ வெளியீடு
இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வாரம் நிகழ்ச்சியில் உயரமானவர்களுடன் நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசும் ஒருவர் காலை நீட்டி உட்கார முடியாது என்ற காரணத்தால் பயணங்களை கூடியவரையில் தவிர்த்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

உயரமானவர்கள் வலி
தொடர்ந்து அடுத்தடுத்த நபர்கள் பேசிய நிலையில், அதில் பேசும் மற்றொருவர், தன்னுடைய உயரம் காரணமாக தன்னை இதுவரை 72 பெண்கள் நிராகரித்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மற்றொருவர் தனக்கு 150 தங்கச்சிகள் உள்ளதாகவும் ஆனால் காதல்தான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

150 தங்கச்சிகள்
நிகழ்ச்சியில் பேசிய பெண் ஒருவர், தன்னிடம் உயரமானவர்கள் காதல் தெரிவித்திருந்தால் தான் கண்டிப்பாக அதை ஏற்றிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து 150 தங்கச்சிகள் என்று கூறியவரிடம் கோபிநாத் அவருக்கு காதல் சொல்ல வருமா என்று கேள்வி எழுப்ப, வராது என்று அவர் கூறுகிறார்.

களைகட்டும் ப்ரமோ
இதையடுத்து அந்தப் பெண் பின்பு எப்படி 150 தங்கச்சிகள் இல்லாமல் இருப்பார்கள் என்று கலாய்த்துத் தள்ளுகிறார். இவ்வாறு இந்த ப்ரமோவே களைகட்டும் வகையில் அமைந்துள்ளது. நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.