twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவியமாக தெரிந்த தந்தை.. நீயா நானா ரூல்சை மாற்றிய ஆங்கர் கோபிநாத்!

    |

    சென்னை : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக 10 ஆண்டுகளை கடந்து கோபிநாத் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.

    சமீப காலங்களில் இவரை விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பார்க்க முடிகிறது. ஆனாலும் கோபிநாத் என்றாலே நீயா நானா ஷோதான் என்றளவில் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு சென்று வருகிறார் கோபிநாத்.

    பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்.. பரபரப்பாக நடக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் பாக்கியராஜ் vs எஸ்.ஏ. சந்திரசேகர்.. பரபரப்பாக நடக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்

    நீயா நானா நிகழ்ச்சி

    நீயா நானா நிகழ்ச்சி

    விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இதன் வெற்றிக்கு அதன் ஆங்கர் கோபிநாத்தான் முழு முதல் காரணமாக அமைந்துள்ளார். ஒரு கான்செப்டை எடுத்துக் கொண்டு அதன் இரு தரப்பு நியாயங்களை இவர் சிறப்பாக கொடுத்து வருகிறார்.

    வித்தியாசமான தலைப்புகள்

    வித்தியாசமான தலைப்புகள்

    ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இவர் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். அதற்கு பொதுவான சிறப்பு விருந்தினர்களையும் இந்த நிகழ்ச்சிகளில் காண முடிகிறது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் டிஆர்பியிலும் முக்கியமான நிகழ்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

    ஏராளமான ரசிகர்கள்

    ஏராளமான ரசிகர்கள்

    இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகள் பல நடத்தப்பட்டாலும் கோபிநாத்தின் நீயா நானா ஷோவிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றன. பல லைவ் விவாத நிகழ்ச்சிகளுக்கும் நீயா நானா தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த வாரமும் இந்த நிகழ்ச்சி சிறப்பான தலைப்புடனேயே களமிறங்களியுள்ளது.

    அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்

    அதிகம் சம்பாதிக்கும் பெண்கள்

    கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள், இந்த மாற்றத்தை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்ற தலைப்பில் இந்த வாரம் நீயா நானா ஷோ களமிறங்கியது. இதில் தன்னுடைய குழந்தையின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை படிக்காத தன்னுடைய கணவன், ஒரு மணிநேரம் எழுத்துக் கூட்டிப் படிப்பதாக அதிகம் படித்து வேலைக்கு செல்லும் மனைவி தெரிவித்தார்.

    காவியமாக தெரிந்த அப்பா

    காவியமாக தெரிந்த அப்பா

    இந்த விஷயம் குறித்து பேசிய அந்த கணவர், தான் அதிகமாக மதிப்பெண்களை எடுக்காத நிலையில், தன்னுடைய மகள், அதை எட்டியது குறித்து தான் அதிகமாக பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த அப்பா தனக்கு காவியமாக தெரிவதாக குறிப்பிட்ட கோபிநாத், நிகழ்ச்சியின் இறுதியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் பரிசை நிகழ்ச்சியில் இடையிலேயே அந்த நபருக்கு கொடுத்து பெருமிதப்படுத்தினார்.

    200 கிமீ பயணிக்கும் பெண்

    200 கிமீ பயணிக்கும் பெண்

    தொடர்ந்து, 200 கிலோமீட்டர் பயணம் செய்து வேலைக்கு செல்லும் ஒரு பெண்ணின் கணவர், தான் தினந்தோறும் பாத்திரங்களை துலக்க வேண்டியுள்ளதாக அங்கலாய்த்தார். தன்னுடைய மனைவி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் அவர் பதிவு செய்தார். அதுகுறித்து அவருக்கு விளக்கிய கோபிநாத், அதில் என்ன தவறு என்று அவருக்கு புரிய வைத்தார்.

    English summary
    Anchor Gopinath in Neeya naana show hails the lady who sacrifies for her job and Family
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X