Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஆரம்பத்திலேயே சூடுபிடித்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்.... தொடரில் ரசிகர்கள் ஆர்வம்
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கியுள்ள தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக துவங்கியுள்ள இந்த சீரியலின் ப்ரமோக்களும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
KPY பாலாவை காதலிக்கிறாரா இந்த குக் வித் கோமாளி பிரபலம்.. அவரே சொன்ன பதிலை பாருங்க!
நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோ சிறப்பான வகையில் அமைந்துள்ளது.
தமிழும் சரஸ்வதியும்
கடந்த திங்கட்கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய தொலைக்காட்சித் தொடர் இரவு 7.30 மணியளவில் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் நாளிலேயே அருகம்புல் ஜூஸ், கம்பு தோசை, வரகரசி பொங்கல் என உணவுப் பிரியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது தொடர்.
#ThamizhumSaraswathiyum இல்.. #VijayTelevision pic.twitter.com/kloRBjYlvc
— Vijay Television (vijaytelevision) July 14, 2021
நிராகரிக்கும் மாமன் மகள்
தொடரில் படிக்காத பணக்காரர் ரோலில் தீபக் நடித்து வருகிறார். நாயகியாக தொகுப்பாளினி மற்றும் நடிகையான நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகிறார். நேற்றைய புதிய ப்ரமோவில் தீபக்கின் மாமன் மகள் அவரை 10வது மட்டுமே படித்துள்ளதாக கூறி திருமணத்திற்கு நிராகரிக்கும் காட்சி காணப்படுகிறது.
மாமன் மகளிடம் சவால்
இதையடுத்து தீபக் உடைந்து போகிறார். அவரது தாய், அந்த பெண்ணை பார்த்து அவரை விட அதிகமாக படித்த பெண்ணை தீபக்கிற்கு மணமுடிப்பேன் என்று சவால் விடுவதாக அந்த ப்ரமோ போகிறது. இந்நிலையில் 12வது வகுப்பில் தேறுவதற்கே போராடும் நட்சத்திரா எவ்வாறு அவருக்கு ஜோடியாக மாறுவார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
எகிரும் எதிர்பார்ப்பு
மாமன் மகளிடம் சவால் விடும் தீபக்கின் அம்மா எவ்வாறு நட்சத்திராவை தீபக்கிற்கு துணையாக ஏற்பார் இவர்களை காலம் எப்படி சேர்த்து வைக்கும் என்பதாக இந்த சீரியல் செல்லவுள்ளது. சிறப்பான சீரியல்களை கொடுத்துள்ள குமரன் இந்த சீரியலை இயக்கியுள்ள நிலையில் மக்களின் இந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.