Don't Miss!
- News நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
ஆரம்பத்திலேயே சூடுபிடித்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்.... தொடரில் ரசிகர்கள் ஆர்வம்
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கியுள்ள தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக துவங்கியுள்ள இந்த சீரியலின் ப்ரமோக்களும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
KPY பாலாவை காதலிக்கிறாரா இந்த குக் வித் கோமாளி பிரபலம்.. அவரே சொன்ன பதிலை பாருங்க!
நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோ சிறப்பான வகையில் அமைந்துள்ளது.
தமிழும் சரஸ்வதியும்
கடந்த திங்கட்கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய தொலைக்காட்சித் தொடர் இரவு 7.30 மணியளவில் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் நாளிலேயே அருகம்புல் ஜூஸ், கம்பு தோசை, வரகரசி பொங்கல் என உணவுப் பிரியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது தொடர்.
#ThamizhumSaraswathiyum இல்.. #VijayTelevision pic.twitter.com/kloRBjYlvc
— Vijay Television (vijaytelevision) July 14, 2021
நிராகரிக்கும் மாமன் மகள்
தொடரில் படிக்காத பணக்காரர் ரோலில் தீபக் நடித்து வருகிறார். நாயகியாக தொகுப்பாளினி மற்றும் நடிகையான நட்சத்திரா நாகேஷ் நடித்து வருகிறார். நேற்றைய புதிய ப்ரமோவில் தீபக்கின் மாமன் மகள் அவரை 10வது மட்டுமே படித்துள்ளதாக கூறி திருமணத்திற்கு நிராகரிக்கும் காட்சி காணப்படுகிறது.
மாமன் மகளிடம் சவால்
இதையடுத்து தீபக் உடைந்து போகிறார். அவரது தாய், அந்த பெண்ணை பார்த்து அவரை விட அதிகமாக படித்த பெண்ணை தீபக்கிற்கு மணமுடிப்பேன் என்று சவால் விடுவதாக அந்த ப்ரமோ போகிறது. இந்நிலையில் 12வது வகுப்பில் தேறுவதற்கே போராடும் நட்சத்திரா எவ்வாறு அவருக்கு ஜோடியாக மாறுவார் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
எகிரும் எதிர்பார்ப்பு
மாமன் மகளிடம் சவால் விடும் தீபக்கின் அம்மா எவ்வாறு நட்சத்திராவை தீபக்கிற்கு துணையாக ஏற்பார் இவர்களை காலம் எப்படி சேர்த்து வைக்கும் என்பதாக இந்த சீரியல் செல்லவுள்ளது. சிறப்பான சீரியல்களை கொடுத்துள்ள குமரன் இந்த சீரியலை இயக்கியுள்ள நிலையில் மக்களின் இந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.