Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புதிதாக ஹோட்டல் திறக்கும் கதிர்.. அண்ணியிடம் ஆசிர்வாதம்.. பாண்டியன் ஸ்டோர்சில் அதிரடி!
சென்னை : விஜய் டிவியின் பிரதான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்த கட்டங்களில் சிறப்பாக சென்று வருகிறது.
அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன் தம்பிகள் மட்டுமின்றி அந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்களும் உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக கதை நகர்கிறது.
விமானத்தில் பிறந்தநாள் பார்ட்டி, சீதா ராமம் நாயகி லூட்டி: கூட யாரெல்லாம் இருந்தாங்கன்னு தெரியுமா?
விஜய் டிவி தொடர்கள்
விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை. இந்தத் தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் சிறப்பான இடங்களை பிடித்து விடுகின்றன. சீரியல்களை பொருத்தவரை சன்டிவிக்கும் விஜய் டிவிக்கும்தான் போட்டி. அந்த வகையில் சன் டிவியின் கயல் தொடரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
இந்நிலையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. நான்கு அண்ணன் -தம்பிகள் அவர்களுடன் வாழ வந்த பெண்கள் அவர்களுக்குள் ஏற்படும் புரிதல்கள் என இந்தத் தொடர் சிறப்பான கதைக்களத்துடன் சென்று வருகிறார்.
கதிர் -முல்லை வெளிநடப்பு
சரியாக சென்றுக் கொண்டிருந்த இந்தத் தொடரில் கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறியது மற்றும் அதையொட்டி மூத்த அண்ணன் மூர்த்திக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக் என்று அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அரங்கேறின. தொடர்ந்து சிறப்பான காட்சி அமைப்புகளுடன் இந்தத் தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஹோட்டல் திறக்கும் கதிர்
வீட்டை விட்டு வெளியேறிய கதிர் ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர, அதை கவுரவக் குறைவாக நினைத்த அவரது மாமியார், ஹோட்டலில் வந்து கத்தி கூப்பாடு போடுகிறார். இதையடுத்து அவரது வேலை பறிபோகிறது. இதனால் மனமுடைந்த நிலையில், மனைவி முல்லையின் ஆதரவோடு தற்போது ஹோட்டல் ஒன்றை துவக்கவுள்ளார்.
அண்ணியிடம் ஆசிர்வாதம்
இதையொட்டி தன்னுடைய அண்ணி தனத்தின் ஆசிர்வாதத்தை பெறும்வகையில் கடைக்கு வருகிறார்கள் கதிரும் முல்லையும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் அவர்களிடம் பேசாமல் உள்ள தனம் தற்போதும் பேசாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால் தன்னுடைய மற்றொரு கொழுந்தனிடம் கூறுவதுபோல, ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை தங்களது கடையிலிருந்து எடுத்துக் கொள்ள சொல்கிறார்.
ஹோட்டலுக்கு அட்வான்ஸ்
இதையடுத்து புதிய ஹோட்டலுக்கு அட்வான்ஸ் கொடுக்கிறார்கள். தொடர்ந்து இதை எப்படி செய்யப் போகிறேன் என்று முல்லையிடம் குறை கொட்டிக் கொள்கிறார் கதிர். ஆனால் முல்லையோ, தாங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதாக தான் கற்பனை செய்து வருவதாக கூறுகிறார். அவரது இந்த வார்த்தைகள் கதிருக்கு தெம்பைக் கொடுப்பதாக எபிசோட் முடிகிறது.
அடுத்தடுத்த சிறப்பான காட்சிகள்
இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சிறப்பான எபிசோட்களுடன் சென்றுவரும் நிலையில், கதிர் -முல்லை இருவரும் புதிய ஹோட்டலை துவக்குகிறார்களா, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்களா என்பதை ரசிகர்கள் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.