Don't Miss!
- Lifestyle
உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் உங்களால் எப்பவும் எடையை குறைக்க முடியாதாம்... உடனே மாத்திக்கோங்க!
- Technology
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
- News
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கு.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம் தகவல்
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Sports
சிங்கம் போல் பாய்ந்த ரோகித், சுப்மான்.. தடுமாறிய நடுவரிசை.. இறுதியில் ஹர்திக் ஸ்பெஷல்.. இமாலய இலக்கு
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வீடு கட்ட தயாராகும் மூர்த்தி.. அடுத்தக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அட நிலம்கூட வாங்கியாச்சா?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
முன்னதாக பாக்கியலட்சுமி தொடருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகா சங்கமத்தில் ஈடுபட்டு ராதிகா மற்றும் கோபியை வைத்து செய்தனர்.
தற்போது புது வீடு கட்டுவதற்காக நிலத்தை வாங்கி அதை அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளார் மூர்த்தி.
சமமான திரையரங்குகளில் வெளியாகும் அஜித் -விஜய் படங்கள்.. ரசிகர்களை எந்தப் படம் கவரும்?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக அண்ணன் -தம்பிகளின் பாசம் மற்றும் ஒற்றுமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரில் தங்களுடைய பூர்வீக வீட்டிலிருந்து வெளியேறி தற்போது வேறு ஒரு வீட்டில் வசித்துவரும் அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கை நிலையை தற்போதைய எபிசோட்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

வீடு கட்ட நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்
இந்நிலையில் புதிதாக வீடு கட்டும் முயற்சியில் மூர்த்தி மற்றும் அவரது தம்பிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மீனாவின் அப்பா முயற்சி தொடர்ந்து தோல்வியை தழுவும் நிலையில், தற்போது மூர்த்தி புதிதாக வீட்டு மனையையை விலைக்கு வாங்கி அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்கிறார். அந்த பத்திரத்தை அண்ணன் -தம்பிகள் தங்களின் மனைவிகளிடம் கொடுக்கின்றனர்.

கேள்வி கேட்கும் மீனா
அந்தப் பத்திரத்தை வாங்கிப் பார்க்கும் தனம் தன்னுடைய மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக உற்சாகத்துடன் கூறுகிறார். தொடர்ந்து மீனா தங்கள் அனைவரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளதாக மூர்த்தி கூறிய நிலையில், அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளது குறித்து கேள்வி எழுப்புகிறார். மூர்த்தியோ, மீனா ஆசைப்பட்டால் பெண்களின் பெயரில் பத்திரத்தை மாற்றி எழுதுவதாக கூறுகிறார்.

அடுத்த வம்பு ரெடி
இதனிடையே அவர்கள் அனைவரும் அந்த மனையை பார்த்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அங்குவரும் மீனாவின் அப்பா, அவர்களின் பழைய வீட்டில் இருந்த சாமான்களை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். அனைத்து சாமான்களையும் வீசாத குறையாக எடுத்து போடுகிறார். அப்போது அவர்கள் பெற்றோர் புகைப்படம் கீழே விழுந்து கண்ணாடி உடைகிறது.

கையை கிழித்துக் கொள்ளும் தனம்
இதைப் பார்த்து பதைபதைக்கும் தனம் அதை எடுக்க முயற்சிக்க உடைந்த கண்ணாடி அவரது கையில் குத்தி ரத்தம் வருகிறது. இதைப் பார்த்த அண்ணன் -தம்பிகள் அனைவரும் கோபமடைகின்றனர். ஜனார்த்தனனை அவர்கள் அனைவரும் முறைத்து பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. அடுத்த எபிசோடை பொறுத்திருந்து பார்க்கலாம்.