வேணு அரவிந்த் தொகுத்து வழங்கும் விழித்தெழு தமிழா!

'வாரம் ஒரு தலைப்பைக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் பாமரனும் தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது 'விழித்தெழு தமிழா' நிகழ்ச்சி.
மின்சாரம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக் காட்டியும் அதற்கான தீர்வுகளையும் உங்கள் கண் முன்னே காட்சிப்படுத்துகிறார்கள்.
எதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளாமல், பிரச்சினைகளுக்கான காரணிகளை அலசி ஆராய்வதோடு, துறை சார்ந்த வல்லுனர்களே இந்நிகழ்ச்சியின் வாயிலாக விளக்கமளிக்கின்றனர்.
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 7.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











