மாமா நமக்கு உண்மையான பாதுகாப்பு யாரு...மிரள வைத்த கீதா
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் வன்முறையின் குவியல் என்று சொல்லலாம். தேவராஜ், நாகப்பன் இருவரால் ஊர் இரண்டு பட்டு கிடக்கிறது.
தேவராஜ் படகுப் போட்டியில் ஏமாத்தி ஜெயிச்சுடறார். இதற்காக போலீஸ் நாகப்பனிடம் கம்பளைண்ட் தர சொல்லியும் நாகப்பன் தரலை.
ஜெயிச்சதுக்கு நேர்த்தி கடன் செலுத்தணும் என்று தேவராஜ் குடும்பம் கோயிலுக்கு போறாங்க. கோயிலில் தேவராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி ஒருவன் போறான்.

முகத்தை மறைச்சு
முகத்தை மறைச்சு முகமூடி போட்டுக்கிட்டு, தேவராஜை கத்தியால் கொலை செய்யத் திட்டமிட...அங்கு ஒரு பெரிய சண்டைக் காட்சியே நடக்கிறது. முக மூடியை அகற்றி யார் என்று பார்க்க அதிர்ந்து போகின்றனர் தேவராஜ் குடும்பத்தினர்.

உடன் இருந்தவன்
தேவராஜ் ஆட்களுடன் பாதுகாப்புக்கு இருந்த ஒருவன் இந்த வேலையை செய்திருக்கிறான்.அவன் தப்பித்து ஓடிவிடறான். வீட்டில் தேவராஜின் தங்கை, மனைவி கவலையில் இருக்காங்க.என்னை கொலை செய்ய வந்தவனை யாரும் எதுவும் செய்ய வேணாம்.

மனைவி பிள்ளைகள்
அவனின் வீட்டில் மனைவி பிள்ளைகள் கவலைப்படக் கூடாது. அப்படி ஒருத்தனை நான் கொலை செய்ய சொன்னேன் என்றால், ஜனங்களுக்கு என் மேல இருக்கும் நம்பிக்கை போயிரும்னு சொல்றார். ஆனால், அவனை யாரோ கொன்று விட்டார்கள்.

மிரள வச்ச கீதா
எல்லாரும் பாதுகாப்புக்கு வந்தவனே கொலை செய்யத் துணிந்து விட்டானே என்று பேசிக்கொண்டு இருக்க, மாமா அப்போ உணமையான பாதுகாப்பாளர் நமக்கு யாரு மாமான்னு கேட்டு அதிர வைக்கறா.

ராமு கீதா
கீதாம்மா என்னம்மா இப்படி கேட்டுட்டீங்கன்னு ராமு பாதுகாப்பாளன் கேட்க, ராமு உன் கையில கத்தி எதுவும் இல்லையேன்னு மிரண்டு போயி கேட்கறா. ஐயோ ஐயோன்னு அவன் அலற... உன்னைப் போலத்தான் அவனும் வந்தான்... ஆனால், கத்தியால மாமாவை கொல்ல வந்துட்டானேன்னு கேட்கறா...


Click it and Unblock the Notifications











