Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
விஜே சித்ராவின் அம்மா செய்த காரியம்.. நெகிழ்ந்து போய் அழுது விட்ட ரசிகர்கள்
சென்னை : சொல்ல வார்த்தை இல்லை .மகளுக்கு பின் தாய் செய்த செயல் தற்போது ரசிகர்களின் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது.
விஜே சித்ராவை போலவே அவருடைய அம்மாவும் செய்திருக்கிறாரே என்று ரசிகர்கள் கவலையிலும் சந்தோஷம் அடைந்து இருக்கின்றனர்.
அட்டகாசம் தான் போங்க.. விநாயகர் சதுர்த்திக்கு நேரடியா சன் டிவியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்!
தன் மனதில் ஆயிரம் கவலை இருந்தாலும் தன்னுடைய மகளை நேசிப்பவர்களை சந்தோசப் படுத்தி இருக்கிறாரே என்றும் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
முல்லைக்கு தான் தனி பட்டாளம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா ரசிகர்களின் மனதில் தனக்கென்று பெரிய இடத்தையே பிடித்து இருந்தார். இந்த சீரியலில் பலர் நடித்திருந்தாலும் அவருக்கு என்று பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தனர். அவருடைய நடிப்பையும் அழகையும் பிடித்துப்போனதால் அவருக்கென்று தனி ரசிகர்களாக மாறியிருந்தனர்.
அனைவருக்கும் பரிச்சயமானவர்
விஜே சித்ராவை பொறுத்தவரைக்கும் அவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும் வலம் வந்திருக்கிறார் .அதனாலேயே அவர் அனைவருக்கும் பரிச்சயமான நபர் தான். சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக வீட்டில் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தனிப்பெண்ணாக ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர் கொண்டு இவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இடியாய் இறங்கிய மரணம்
வாழ்க்கையில் ஒவ்வொரு துறைகளிலும் ஒவ்வொரு படியாக முன்னேறி கொண்டிருந்தவர் திடீரென மரணம் அடைந்து விட்டார் என்று செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய குடும்பத்தை போலவே அவருடைய ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் அதிக கவலையிலும் இருந்தனர். தற்போது வரைக்கும் அவருடைய இறப்பு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் கடந்து போக முடியாமலும தான் இருந்து வருகிறது.
ரசிகர்களுடன் கொண்டாட்டம்
அவர் யாரையும் போல அல்லாமல் எவ்வளவு பெரிய செலிப்ரிட்டியாக மாறி இருந்தாலும் எனக்கு ரசிகர்கள்தான் முக்கியம் என்று ரசிகர்கள் மீது அதீத பாசத்தை வைத்து இருந்தார் .அதனால் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பல பேன்ஸ் பேஜ்களை வைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுத்து ஒரு பிரண்ட்ஸ் போலத்தான் பழகி வந்தார் .அது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களின் பிறந்தநாளுக்கு சில நேரங்களில் நேரடியாக சென்று பரிசுகள் கொடுத்து ஷாக் கொடுத்திருந்தார்.
இப்போ இல்லையே என ஏக்கம்
அந்தமாதிரி அவர் பிறந்த நாள் கொண்டாடிய ஒரு ரசிகர் தற்போது இந்த பிறந்த நாளில் அவர் இல்லாததை நினைத்து ரொம்பவே வருத்தம் அடைந்து ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். சித்ராவின் அம்மா இந்த பிறந்தநாளுக்கு அந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோஸ்களும், போட்டோஸ் களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது . இந்த வீடியோவை பார்த்ததும் பலர் சித்ராவை நினைத்துத் தங்களுடைய மனக் கவலையை தெரிவித்து வருகின்றனர்.
எல்லார் மனதிலும் இருக்கிறார்
அதுமட்டுமல்லாமல் தாயைப் போல பிள்ளை என்றுதான் பழமொழி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு பிள்ளையை போல தாயாக இருக்கிறீர்கள் அம்மா என்று சித்ராவின் அம்மாவுக்கும் பலர் ஆறுதல் அளித்து வருகின்றனர் .என்னதான் ரசிகராக இருந்தாலும் எந்த ஒரு நடிகையயும் இந்த அளவிற்கு ரசிகர்களின் மீது பாசத்தை வைக்க மாட்டார்கள். ஆனால் சித்ரா அனைவரிடமும் சகஜமாக பழகி எல்லோர் மனதிலும் இப்ப வரைக்கும் வாழ்ந்து வருகிறார்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!