Don't Miss!
- News கருத்துக்கணிப்புகளை கண்டு கவனம் சிதற வேண்டாம்.. நம் வெற்றியை நாடே திரும்பிப் பார்க்கும் : ஸ்டாலின்
- Finance இனி தினமும் பார்ட்டி தான்.. சோமேட்டோ கொண்டு வந்த புதிய சேவை..!!
- Technology டாப் 5 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் Mobile போன்கள்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 100% சார்ஜ் வெறும் 20 நிமிடங்களில்..
- Automobiles சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
- Lifestyle 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- Sports ஜெய்ஸ்வாலுக்கு டாடா பைபை.. இந்திய அணியின் துவக்க வீரராக மாறிய ஜாம்பவான்.. ரோஹித் அதிரடி முடிவு
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
என்ன இப்படி ஆயிட்டீங்க பார்வதி… நலம் விசாரிக்கும் நெட்டிசன்ஸ் !
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30க்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது சர்வைவர்.
100 நாள் தீவில் வசிக்க வேண்டும் என்ற இந்த வித்தியாசமான நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படப்பிடிப்பு நிறைவு பெற்றது!
சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வைவர்
சரண் போன் பேசியதைத் தொடர்ந்து சர்வைவர் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாகி உள்ளது. இதில், போன் பயன்படுத்தி தவறு செய்த சரண், அர்ஜுனின் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். இதனால் மற்ற போட்டியாளர்களும் சரண் மீது கோபமாக உள்ளனர்.
விஜி 3ம் உலகத்தில்
இதையடுத்து, நடந்த டாக்ஸில் தங்க முத்து அதிர்ஷ்டத்தின் மூலம் சரண் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து, இன்னொருவரை எலிமினேட் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சரண், விஜியை எலிமினேட் செய்தார். இதையடுத்து விஜயலட்சுமி 3வது உலகத்திற்கு போகிறார்.
பார்வதி வெளியேறினார்
கடந்த வாரம் இவருக்கும் ராம்-க்கும் போட்டி நடைபெற்றது. இதில் ராம் தோல்வியடைந்ததால் பார்வதி மீண்டும் தொடர்ந்தார். அந்த டாஸ்கை வென்ற பின்னர் பார்வதி போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. 3வது நபராக விஜி மூன்றாம் உலகத்திற்கு வந்ததால், காயத்ரிக்கும் பார்வதிக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பார்வதி எலிமினேட் ஆகி சர்வைவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி உள்ளார்.
பொலிவான முகம் மிஸ்
இதையடுத்து, தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் கண்ணாடி முன் நின்று கொண்டு, அய்யோ என் பேஸ் இப்படி டார்க் ஆகும்னு நான் நினைக்கவே இல்லை என்கிறார். என் உதடு ரொம்ப டார்க்கா ஆய்டுச்சி இதுக்கு நான் ட்ரீட்மென்ட் போகனும் என்று கூறுகிறார்.
நெட்டிசன்ஸ் கிண்டல்
சர்வைவருக்கு முன் எடுத்த புகைப்படத்தையும், சர்வைவருக்கு பின் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள பார்வதி, என்னுடைய பழைய பொலிவான முகத்தை மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இணைய வாசிகள் என்ன இப்படி ஆயிட்டீங்க என்றும் இது மேக்கப்புக்கு முன் இது மேக்கப்பிற்கு பின் என்றும் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.