ராதிகா, செம்பா, அண்ணியாரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended Video

சென்னை: தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரம் தெரிய வந்துள்ளது.
பெரிய திரையில் ஹீரோயினாக இருந்தவர்கள் பலர் தற்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்தவர் என்றால் அது ராதிகா சரத்குமார் தான்.
வாணி ராணி சீரியல் என்பதை மறந்து அதை நிஜம் என்று நம்பும் அளவுக்கு மக்கள் உள்ளனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

ராதிகா
வாணி ராணி சீரியலை தயாரித்து நடிக்கும் ராதிகா சரத்குமார் எபிசோடு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பெறுகிறாராம். சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட ராதிகாவின் சீரியலை மட்டும் பார்க்க தவறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவயாணி
ரம்யா கிருஷ்ணன் மற்றும் தேவயாணி ஆகியோர் எபிசோடு ஒன்றுக்கு ரூ. 40 முதல் 50 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்களாம். இருவருமே பெரிய திரையை போன்றே சின்னத்திரையிலும் பிரபலம்.

வாணி போஜன்
மகேஸ்வரி, வாணி போஜன், ரஷிதா, தென்றல் ஸ்ருதி, மௌன ராகம் ஷமிதா, மதுமிதா ஆகியோர் எபிசோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள்.

ஆல்யா மானஸா
நளினி, திருமதி செல்வம் புகழ் அபிதா ஆகியோருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் அளிக்கப்படுகிறதாம். ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா, சாந்தி வில்லியம்ஸ், மோனிகா மேக்னா, அண்ணியார் நிஷா ரேகா, வடிவுக்கரசி ஆகியோர் எபிசோடுக்கு ரூ. 10 ஆயிரம் பெறுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











