Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் நாகப்பன் பொண்ணு யாழினி தன் அப்பாவுக்காக பேசும் பேச்சு ரொம்ப கெத்தா இருக்கு.
நாகப்பனின் ஆட்களை கொன்றது... அவர் வீட்டுக்குள்ள குண்டு வச்சு மீனை அனுப்பினதுன்னு தேவராஜ் நிதானமா கெடுதல் வேலைகளை பார்க்கறார்.
நாகப்பன் மட்டும் லேசு பட்டவர் இல்லை... தேவராஜை தீர்த்துக்கட்ட பிளான் போட்டுட்டு நல்லவர் போல இருக்கார்.
சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்!
இவ்ளோ தைரியம்
மீனில் வெடிகுண்டு இருந்ததை கண்டுபிடிச்சு கடலில் கொண்டு போட்டுட்டு வர்றா. நாகப்பன் மகள் யாழினியிடம் .எப்படிம்மா இவ்ளோ தைரியமா வெடிகுண்டை எடுத்துட்டு போனே.. .உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்னால எப்படிம்மா தாங்கிக்க முடியும்னு கேட்கறார் நாகப்பன்.
இவர்களை
அப்பா...இன்னிக்கு உங்களுக்கு வெடிகுண்டு வெடிச்சு ஏதாவது ஆகி இருந்தா நாங்க என்னய்யா பண்றதுன்னு இவ்ளோ ஜனங்க கவலையில் கூடி இருக்காங்க. எனக்கு எதாவது ஆச்சுன்னா ஒண்ணுமில்லைப்பா...உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்களையே நம்பி இருக்கும் இந்த ஜனங்களுக்கு நீங்கதானே இருக்கீங்கப்பான்னு சொல்றா.
கெத்து பொண்ணு
நாகப்பனின் இரண்டு பெண்களில் சின்னப் பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம்... அம்மா மாதிரியே எந்த பிரச்சனையும் வேணாம்..நாம இந்த ஊரை விட்டே போயிடலாம்னு அடிக்கடி சொல்றவ. இதுல யாழினி மாதிரி கெத்தா ஒரு பொண்ணு இருந்தா நாகப்பனுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்...
தப்பிச்சுட்டார்
தேவராஜை நாகப்பன் கொலை செய்துருவார்னு, போலீஸ் அவரை நடு கடலில் போட்டில் வச்சு காப்பாத்தறாங்க. நாகப்பன் கொடுத்த கெடு முடிஞ்சதும் போலீஸ் உங்க வீட்டுக்கு போலாம்னு கூப்பிட தேவராஜ் மாட்டேன்..கொஞ்ச நேரமிருந்துட்டு வரேன் நீங்க போங்கன்னு சொல்றார்.
போட் கவிழ்ந்து
நடுக்கடலில் போட் கவிழ்ந்து தேவராஜ் கடலில் விழுந்துடறார். இந்த ஏற்பாட்டை செய்தவர் நாகப்பன். தேவராஜ் செத்துட்டான்னு நாகப்பன் சந்தோஷமாக விருந்து சாப்பிட,தேவராஜ் நீந்தி தப்பிச்சு வந்துடறார்.அவரோட ஆட்கள் வெட்டுவேன்..குத்துவேன்னு கிளம்பறாங்க..
இப்படித்தாங்க திக் திக்னு சீரியல் நகருது.