Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐயோ..அம்மா நெஞ்சு வலிக்குதே... சாந்தி முகூர்த்தத்தை நிறுத்த இப்படியுமா?
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியலில் கண்மணியும், செழியனும் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகியும் ஒண்ணு சேரலை.
இவங்களை சேர விடக்கூடாதுன்னே செழியனுக்கு பார்த்த பொண்ணு சுஹாசினி இவங்க வீட்டுல வந்து தங்கிக்கறா.
செழியனுக்கு பல விஷங்களை சொல்லிக் குடுத்து கண்மணியை நெருங்க விடாம பார்த்துக்கறா.
ஹீரோ டைட்டில் சிவகார்திகேயனுக்கா விஜய் தேவர கொண்டாவுக்கா?
வெறுப்பு கண்மணிக்கு
கண்மணிக்கு ஒரு கட்டத்தில் செழியனின் குணத்தின் மேல வெறுப்பு வந்து..இனிமே அவருக்கு இடைஞ்சலா இந்த வீட்டிலிருக்க கூடாதுன்னு கிளம்பிடறா. .
செழியனுக்கு ஆசை
இப்போதுதான் செழியனுக்கு கண்மணி மேல லவ் பொத்துகிட்டு வருது. இன்னிக்கு சாயந்தரமே அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வரப்போறேன்னு சுஹாசினிகிட்ட சொல்றான். அவளுக்கு இது பிடிக்காமல் கண்மணியை கடத்த ஏற்பாடு செய்யறா.
காணோம் கண்மணியை
கண்மணியை காணோம்னு செழியனும், கண்மணி அப்பாவும் தேடிகிட்டு இருக்காங்க கடைசியா ஒரு கோயிலில் கண்மணியை கண்டுபிடிச்சுடறான் செழியன். ரெண்டு பேரும் கட்டிக்கறாங்க. அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வர சுகாசினி எரிச்சல் ஆகறா.
நெஞ்சு வலிக்குதே
கண்மணி இரவு செழியனுக்கு பால் கொண்டு போக..சுகாசினி ரூமிலிருந்து எட்டிப் பார்க்கறா. அவளைப்பார்த்து வெடுக்கென்று முகத்தை திருப்பிகிட்டு கண்மணி மேல போக..அச்சச்சோ.. இதை எப்படியாவது தடுக்கணுமேன்னு நெஞ்சு வலிக்குதேன்னு நடு ஹாலில் நின்னு கத்தறா.
மாமா நீங்க
செழியன் சுகாசினியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போக தயாராக, சின்ன மருமகள் சுமதி..மாமா நீங்கப்போங்க மாமா..நானும் என் புருஷனும் சுகாசினியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போறோம்... இருக்கறதுலயே பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போயி, எல்லா டெஸ்ட்டும் எடுத்துடறோம்னு சொல்லி, சுகாசினி உன் டெபிட் கார்டு எடுத்துக்கோ..அதுலதான் பணம் எடுக்கணும்னு சொல்றா...
அடிப்பாவி..என் காசு எல்லாத்தையும் காலியாக்கிடுவா போலிருக்கேன்னு நினைச்சுகிட்டே ஆஸ்பத்திரிக்கு போறா சுகாசினி.
கெடுவான் கேடு நினைப்பான்...வேற என்னத்தை சொல்ல?