அரண்மனை கிளியில் மாயனுக்கு என்ன வேலை...?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனைக் கிளி சீரியல் அர்ஜுன் ஜானுவின் விவாக ரத்து கேஸ் கோர்ட்டில் நிற்கவில்லை.
அதைவிட அர்ஜுன் ஜானு இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல்தான் இருந்தனர். அதுக்கு ஏத்த மாதிரி விவாக ரத்து கேஸ் கோர்ட்டில் நிற்கவில்லை.

தொழிலதிபர் மீனாட்சி அம்மாவின் மகன் அர்ஜுனுக்கு விபத்தில் கால் நடக்க முடியாமல் போய்விடுகிறது.சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறான்.

ஏழைப்பெண் ஜானுவைத்தான் அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வைக்கறாங்க மீனாட்சி அம்மா.இப்போது,அர்ஜுனின் காலை சரி செய்ய வெளியூர் போவதால், வீட்டில் சமைக்க ஆள் இல்லையேன்னு தவிக்கறா ஜானு.
நீ கவலைப்படாதே ஜானு அதுக்கு நான் ஏற்பாடு செய்துடறேன்னு சொல்லிட்டு போன் பண்றான் அர்ஜுன். பார்த்தா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாயகன் மாயனுக்கு அந்த போன் போகுது.

சொல்லுங்க ஃபிரண்டுன்னு மாயன் பேச, நான் மருத்துவம் பார்க்க வெளியூர் போறேன்..எனக்கு ஒரு உதவி செய்வியான்னு கேட்கறான் அர்ஜுன். நண்பனுக்கு ஒண்ணுன்னா ஓடி வந்து நிப்பேன்..என்ன சொல்லுன்னு கேட்கறான்.
இல்லை..சமையலுக்கு ஆளில்லை..அதான் நீ பார்த்துக்கறியான்னு கேட்க...அட நீ கெளம்பு நான் வந்து சமையல் வேலையை பார்த்துக்கறேன்னு சொல்றான் மாயன்.
விஜய் டிவியின் இந்த யுக்தி கூட நல்லாருக்கு... ஒரு சீரியலில் நடிக்கும் நபரை அதே கேரக்டரா இன்னொரு சீரியலுக்கு கூப்பிடறது ரொம்ப நல்லாருக்கு.


Click it and Unblock the Notifications











