பில்ட்அப் எல்லாம் பெருசா இருந்துச்சு, ஆனால் இன்னும் ஒன்னும் நடக்கலையே பிக் பாஸ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சிறை அமைக்கப்பட்டிருப்பதாக பெரிதாக விளம்பரம் எல்லாம் செய்தார்களே அதை ஏன் இன்னும் பயன்படுத்தவே இல்லை.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கான வீட்டின் புகைப்படங்கள் வெளியானபோது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த சிறை தான். ஆனால் நிகழ்ச்சி துவங்கி 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் சிறையை காட்டவே இல்லை.
ஏன், யாருமே சிறை பக்கம் கூட சென்றதாக தெரியவில்லை.

பில்ட்அப்
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே கமல் ஹாஸனும் சிறையை பற்றி தான் விசாரித்தார். பலமாக கொடுத்த பில்ட்அப்பை பார்த்தபோது இந்த சீசனில் இருக்கு சிறை வேட்டை இருக்கு என்று நினைத்தால் ஏமாற்றம் தான் இருக்கு போல.

மகத்
யாஷிகா, ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து மகத் அடிக்கும் லூட்டியை பார்க்கும் போதெல்லாம் அந்த பயளை புடுச்சு ஜெயிலுல போடுங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் தான் குமுறுகிறார்கள். பிக் பாஸ் மகத்தின் லீலைகளை ரசித்து பார்ப்பதாகவே தெரிகிறது.

குற்றம்
ஏன், பிக் பாஸ் மகத் செய்வது எல்லாம் உங்களுக்கு குற்றமாக தெரியவில்லையா?. யாஷிகா இடுப்பை பிடிக்க பாய்ந்தது, அந்த புள்ளைய கட்டிப்பிடித்து என்ன சுகம்டா என்பது இதெல்லாம் உங்களுக்கு குற்றமா தெரியவே இல்லைல?

யஷ்
மகத்தை பிடித்து சிறையில் போட்டால் ஐஸுமா, யஷ் என் நிலை இப்படி ஆகிவிட்டதே, என்னை உற்சாகப்படுத்த ஒரு முத்தம் கொடுங்க என்று கேட்டாலும் கேட்பார். கெட்ட பய சார் இந்த மகத்.
ப்ரொமோ
இன்றைய ப்ரொமோ வீடியோவில் போட்டியாளர்கள் தங்களின் தந்தையை நினைத்து கண்ணீர் விடுகிறார்கள். பாலாஜி மட்டும் மகளை பற்றி பேசுகிறார். இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் அது என்னவென்ற விபரம் தெரியும்.
பிக் பாஸ்: வீக் என்ட் வருகிறது, எந்த போட்டியாளரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்?


Click it and Unblock the Notifications











