Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா
மும்பை: யுத் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கின்போது நடிகர் அமிதாப் பச்சன் செய்த குறும்பால் நடிகை சரிகா கண் கலங்கிவிட்டார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸனின் முன்னாள் மனைவியான சரிகா யுத் என்னும் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சரிகா அமிதாபின் முன்னாள் மனைவியாக நடிக்கிறார். இந்நிலையில் அமிதாப் முகத்தில் சரிகா கோபமாக கதவை சாத்தும் காட்சி எடுக்கப்பட்டது.
அப்போது எங்கே ஓங்கி கதவை சாத்தினால் அமிதாபுக்கு அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் சரிதா இருந்தார். அப்போது அவர் கதவை சாத்த அமிதாப் தனக்கு அடிபட்டுவிட்டது என்று கூறி வலியால் அலறினார். இதை பார்த்த சரிகா உள்ளிட்ட மொத்த யூனிட்டும் பதறிப் போனார்கள்.
சரிகாவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துவிட்டது. கடைசியில் பார்த்தால் அமிதாப் கதவை திறந்து கொண்டு சிரித்துக் கொண்டே சும்மா விளையாடினேன் என்றார்.