Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
‘மானாட மயிலாட’ குஷ்புவைக் காணோமே?
கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்தே அதில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ மானாட மயிலாட. இதுவரை 7 சீசன்களை கடந்து 8 வது சீசன்வரை வந்துள்ளது.
கலா மாஸ்டர் இயக்கியுள்ள இந்த நடனநிகழ்ச்சியில் சின்னத்திரைக் கலைஞர்களின் நடனம்தான் முக்கிய அம்சம். இதனை திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் நடுவர்களாக அமர்ந்து மதிப்பெண் போடுவார்கள். வெற்றி பெரும் நடன ஜோடிக்கு பட்டமும், பல லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலா, பிருந்தா, ரம்பா, சிம்ரன், குஷ்பு, நமீதா என பலரும் நடுவர்களாக வந்துள்ளனர். 8 வது சீசனில் நடுவராக முதன் முறையாக பிரசாந்த் வந்தார். குஷ்பு, கலா, பிரசாந்த் ஆகியோர் அமர்ந்து மதிப்பெண் போட்டு வந்த நிலையில் இந்த வாரம் குஷ்பு இடம் பெறவில்லை.
கலா மாஸ்டரும், பிரசாந்தும் மட்டுமே நடுவர்களாக இருந்தனர். அதுவும் சிறைச்சாலை செட் நடனம் என்பதால் கலா மாஸ்டர் வழக்கறிஞர் போலவும், பிரசாந்த் சிறை அதிகாரி போலவும் உடை அணிந்திருந்தனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கீர்த்தி, ரியாஸ்கான் ஆகியோர் சிறை அதிகாரி போல உடை அணிந்திருந்தனர்.
சினிமாக்களிலும் சீரியல்களிலும்தான் மது அருந்துவது, புகைப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது ரியாலிட்டி ஷோக்களிலும் மது அருந்தும் காட்சிகள் இடம் பெற ஆரம்பித்துவிட்டன. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கவனிக்கலாமே?