Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஐஸ்வர்யா கையில் பச்சை குத்தியிருக்கும் 'கோபி' யார் தெரியுமோ?
Recommended Video
சென்னை: ஐஸ்வர்யா தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருப்பது பற்றி தான் பேச்சாக உள்ளது.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யா குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. அதற்கு காரணம் அவரது கை விரலில் இருக்கும் பச்சை தான்.
அவர் கோபி என்பவரின் பெயரை இடது கை மோதிர விரலில் பச்சை குத்தியுள்ளார்.
பச்சை
கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கோபி தான் மிகவும் நெருக்கமான நபராம். யார் அந்த கோபி, அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்ன உறவு என்று விசாரித்தால் எல்லாம் இருக்க வேண்டிய உறவு தானாம். ஐஸ்வர்யாவும், கோபியும் 'நல்ல நண்பர்கள்' என்று கூறி சிரிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஷாரிக்
ஐஸ்வர்யா அந்த கோபியுடன் நெருக்கம் காட்டுவது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டிற்கு வந்த இடத்தில் ஷாரிக் மீது காதலில் விழுந்தார். அப்படி என்றால் யாஷிகா, மகத் போன்று வெளியே ஆள் இருக்க, வந்த இடத்தில் ஆட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஹய்யோ, எல்லாமே இப்படிப்பட்ட காதலா என்று பார்வையாளர்கள் நொந்து கொள்கிறார்கள்.
தொலைபேசி
அம்மா உயிருடன் இருக்க அவர் இறந்துவிட்டதாக டேனியிடம் தெரிவித்தவர் ஐஸ்வர்யா. பின்னர் அவர் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது அவரின் குட்டு உடைந்தது. போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பபட்டவர்களுடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கொடுத்தார் பிக் பாஸ். அப்போது ஐஸ்வர்யா தனது அம்மாவுடன் அல்ல மாறாக அந்த கோபியுடன் தான் பேசினார்.
யார் அவர்?
கோபியுடன் தொலைபேசியில் பேசியபோது கூட தனது கை விரலில் இருக்கும் பச்சையை தடவியபடியே பேசினார் ஐஸ்வர்யா. இதை பார்வையாளர்கள் பலரும் கவனித்திருக்கிறார்கள். அந்த கோபி யார் என்று சக போட்டியாளர்கள் கேட்டதற்கு பொய் சொல்லி மழுப்பியிருக்கிறார் அவர். இவ்வளவு கோபக்காரியான ஐஸ்வர்யாவுடனும் ஒருவர் நல்ல நண்பராக இருக்கிறார் என்றால் அந்த நபரை பார்க்க வேண்டுமே என்று பார்வையாளர்கள் ஆசைப்படுகிறார்கள்.