Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்!
Recommended Video
சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகை சுஜா வருணி.
நூறாவது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ள சுஜா வருணி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நன்றி :
'மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
நான் சுயநலவாதியா :
சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. கணேஷ், ஹரீஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.
கமல் கொடுத்த ஊக்கம் :
கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்துப் பேசும்போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க வருவதில் மகிழ்ச்சி.
உண்மை ஜெயிக்கும் :
எனக்கு ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை ஜெயிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஓட்டுப் போடும்போது கவனமாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.