Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிக்பாஸ் வீட்டில் யார் ஜெயிப்பார்? - வெளியேறிய சுஜாவின் கடிதம்!
Recommended Video
சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் போட்டியாளராக உள்ளே வந்தவர் நடிகை சுஜா வருணி.
நூறாவது நாள் நெருங்கும் சமயத்தில் இவர் குறைவான ஓட்டுகள் பெற்றதோடு, சினேகனின் மதிப்பெண்கள் கிடைக்காததால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகியுள்ள சுஜா வருணி தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நன்றி :
'மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பற்றி வந்த கிண்டல், மீம்கள் செய்தது எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறது. அன்பு காட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
நான் சுயநலவாதியா :
சிலர் என்னை கடும் உழைப்பாளி எனவும், சிலர் சுயநலவாதி என்றும் கூறினர். இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி தான். அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. கணேஷ், ஹரீஷைத் தவிர எல்லோருமே நடிக்கிறார்கள். நான் நானாகவே எப்போதுமே இருந்திருக்கிறேன்.
கமல் கொடுத்த ஊக்கம் :
கமல் சார் எனக்கு ஊக்கம் கொடுத்துப் பேசும்போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அது எனக்கு சிறப்பான தருணம். மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களைச் சந்திக்க வருவதில் மகிழ்ச்சி.
உண்மை ஜெயிக்கும் :
எனக்கு ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை ஜெயிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஓட்டுப் போடும்போது கவனமாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.