Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை வெளியேற்றினார் என்பதற்கான காரணத்தை பார்வையாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமாரை அடுத்து அப்பா என்ற பெயரில் அட்டகாசம் செய்த மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.
வனிதா விஜயகுமாரை வெளியேற்றியபோது பாவப்பட்ட பார்வையாளர்கள் மோகன் வைத்யா கிளம்பியதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
என்னது 'ஆடை'யும் உங்களுடைய கதையா.. உண்மையிலேயே இது தான் 'அயோக்கியத்தனம்' பார்த்திபன் சார்!
நிம்மதி
மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். அப்பா என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, முத்தம் கொடுக்கச் சொல்வது, இடுப்பில் கையை போடுவது என்று இனி பாலியல் தொல்லை எதுவும் நடக்காது என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். எவிக்ஷன் கார்டில் மோகன் வைத்யாவின் பெயரை பார்த்ததும் லாஸ்லியாவுக்கு அப்படி ஒரு நிம்மதி. மோகன் வைத்யாவின் குணம் அறிந்ததால் அவர் நிம்மதி அடைந்திருக்கிறார்.
மோகன் வைத்யா
மோகன் வைத்யா தனது வயதை காரணம் காட்டி பெண் போட்டியாளர்களை சும்மா சும்மா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததை பாலியல் தொல்லை என்று பேசத் துவங்கிவிட்டனர் பார்வையாளர்கள். பாலியல் தொல்லை பிரச்சனை இனி வேண்டாம் என்று நினைத்து தான் பிக் பாஸ் மோகன் வைத்யாவை பேக்கப் பண்ணிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஓவர்
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு மோகன் வைத்யா பண்ண ஓவர் ஆக்டிங்கை பார்த்து யாருக்கும் அவர் மீது பாவப்படத் தோன்றவில்லை. மாறாக போதும் போதும் நடிப்பு ஓவராக இருக்கு வீட்டை விட்டு கிளம்புங்க என்று தான் பார்வையாளர்கள் எரிச்சலுடன் தெரிவித்தனர். இந்த சீசனில் ஒரு போட்டியாளர் கிளம்பியதை பார்த்து பார்வையாளர்கள் இவ்வளவு சந்தோஷப்பட்டது மோகன் வைத்யாவுக்கு தான்.
மீரா
மோகன் வைத்யா கிளம்பியபோது மீரா மிதுன் அவரை கட்டிப்பிடிக்க வர அவர் கண்டுகொள்ளவில்லை. இதையும் பார்வையாளர்கள் விளாசியுள்ளனர். யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டீர்கள் ஆனால் பிக் பாஸ் வீட்டில் நீங்கள் நடந்து கொண்டதை பார்க்கும்போது உங்களின் கெட்ட எண்ணத்திற்கு இனியும் யாருமே இருக்க மாட்டார்கள் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.