Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிக் பாஸில் எட்டிப்பார்த்த அரசியல்வாதி கமல்: அரசுகள் ஊழல் செய்வது குறித்து நறுக்
Recommended Video
சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசாங்கங்கள் ஊழலாவது ஏன் என்று விளக்கம் அளித்தார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் தான் சூடுபிடித்தது. அதற்கு காரணம் கமல் ஹாஸன் வருகை. நேற்றைய நிகழ்ச்சியில் அவர் அரசியல் பேசி கைதட்டல்களை அள்ளினார்.
நேற்றைய நிகழ்ச்சி கமல் செய்தவை,
பாடல்
வைஷ்ணவி கேட்டுக் கொள்ள மாருகோ மாருகோ பாடலை பாடினார் கமல். மனிதர் அந்த பாடலை பாடியபோது அவர் கண்களே கதை பேசியது. கமல் பாடியதை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் குஷியாகி எழுந்து நின்று கை தட்டினார்கள். ஆனால் ஆனந்த் வைத்தியநாதன் மட்டும் பாராட்டவில்லை. அவருக்கு கமல் மீது என்ன கோபமோ?
நாய்
பீம் பாய் பீம் பாய் வசனத்தை பேசிக் காண்பித்தார் கமல் ஹாஸன். நாய் என்ற வார்த்தையை சொல்லலாம் அல்லவா என்று கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்டார்.
கடவுள் பாதி
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று பாடிய கமல் ஹாஸன் அந்த பாடல் வளர்ந்த விதத்தை சொல்லி அந்த குடும்பம் எங்களுடைய பிக் பாஸ் என்று கூறி மகிந்தார்.
கடமை
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் கமல். கடமையை செய்வதை ஏதோ தியாகம் மாதிரி நினைப்பதால் தான் பல அரசுகள் கரப்ட் ஆகிறது என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் கமல். பல அரசாங்கங்கள் ஊழலுக்கு ஆளாவதற்கு காரணம் செய்யும் கடமையையே ஏதோ தியாகம் என்று நினைப்பது தான் என்றார் கமல். விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு பாடலை பிக் பாஸ் மேடையில் வெளியிட உள்ளேன் என்று தெரிவித்தார் கமல்.