Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிக் பாஸில் எட்டிப்பார்த்த அரசியல்வாதி கமல்: அரசுகள் ஊழல் செய்வது குறித்து நறுக்
Recommended Video
சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசாங்கங்கள் ஊழலாவது ஏன் என்று விளக்கம் அளித்தார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் தான் சூடுபிடித்தது. அதற்கு காரணம் கமல் ஹாஸன் வருகை. நேற்றைய நிகழ்ச்சியில் அவர் அரசியல் பேசி கைதட்டல்களை அள்ளினார்.
நேற்றைய நிகழ்ச்சி கமல் செய்தவை,
பாடல்
வைஷ்ணவி கேட்டுக் கொள்ள மாருகோ மாருகோ பாடலை பாடினார் கமல். மனிதர் அந்த பாடலை பாடியபோது அவர் கண்களே கதை பேசியது. கமல் பாடியதை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் குஷியாகி எழுந்து நின்று கை தட்டினார்கள். ஆனால் ஆனந்த் வைத்தியநாதன் மட்டும் பாராட்டவில்லை. அவருக்கு கமல் மீது என்ன கோபமோ?
நாய்
பீம் பாய் பீம் பாய் வசனத்தை பேசிக் காண்பித்தார் கமல் ஹாஸன். நாய் என்ற வார்த்தையை சொல்லலாம் அல்லவா என்று கமல் பார்வையாளர்களை பார்த்து கேட்டார்.
கடவுள் பாதி
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று பாடிய கமல் ஹாஸன் அந்த பாடல் வளர்ந்த விதத்தை சொல்லி அந்த குடும்பம் எங்களுடைய பிக் பாஸ் என்று கூறி மகிந்தார்.
கடமை
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றார் கமல். கடமையை செய்வதை ஏதோ தியாகம் மாதிரி நினைப்பதால் தான் பல அரசுகள் கரப்ட் ஆகிறது என்று ஒரு பன்ச் டயலாக் பேசினார் கமல். பல அரசாங்கங்கள் ஊழலுக்கு ஆளாவதற்கு காரணம் செய்யும் கடமையையே ஏதோ தியாகம் என்று நினைப்பது தான் என்றார் கமல். விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு பாடலை பிக் பாஸ் மேடையில் வெளியிட உள்ளேன் என்று தெரிவித்தார் கமல்.