Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
Arundhathi serial: அருந்ததி சீரியலில் கோவை சரளா எதுக்கு வந்தாங்க?
சென்னை: சன் டிவியின் பேய் சீரியல் அருந்ததி சீரியல். இந்த சீரியல் ஆரம்பத்தில் முருகன் கோயில், பெரிய முருகன் சிலை, முருகன் பக்தை தெய்வானை.கோயிலைக் கட்டி சிலை அமைத்த ஜாமீன் குடும்பத்தை சேர்ந்த ஈஸ்வரி என்று நன்றாகவே டெலிகாஸ்ட் ஆகிட்டு வந்தது.
அமெரிக்காவில் இருந்து ஈஸ்வரியின் மகன் சண்முகம், தான் அங்கு காதலித்த சுலேகா என்கிற பெண்ணுடன், இங்கு அவளை கல்யாணம் செய்துக்க வர்றான். அவளின் தூண்டுதலால், அருந்ததி பேய் இருந்த கிணற்றுக்கு போட்டு இருந்த மந்திரக் கட்டுக்களை அவிழ்த்து விட்டுடறான்.
இதனால், வெளியில் வந்த அருந்ததிக்கு பெண்ணின் ஆவி, சண்முகத்தின் உடலுக்குள் புகுந்து, தன்னை சீரழிந்த இந்த குடும்பத்தின் ஒரு ஆணையும் உயிரோடு விட மாட்டேன் என்று சபதம் போடுகிறது.
ஈஸ்வரி அம்மா தெய்வானை
சுலேகா ஸ்ஸ்வரி குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் அமெரிக்காவுக்கே போயி விடுகிறாள். இதன் பிறகு முருகன் பக்தையான தெய்வானையை குடும்பத்துக்கு மருமகளா கொண்டு வரணும்னு ஈஸ்வரி அம்மா ஆசைப்படறாங்க. அதற்குள் சண்முகத்தின் உடலில் அருந்ததியின் ஆவி புகுந்துருது. பெண்ணாக நடந்துக்கும் சண்முகத்தின் நடிப்பும் ரசிக்கும்படிதான் இருந்தது. இப்படி சீரியல் தொய்வில்லாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.
சன் டிவிக்கு பயமா
இப்படி நன்றாக சென்றுகொண்டு இருந்த சீரியலில் நடிகை கோவை சரளா இரண்டு சிரிப்பு நடிகர்களுடன் திருடி என்கிற வேடத்தில் அருந்ததி சீரியலில் ஒரு வாரம் நடித்தார்.நிஜமா கோவை சரளாவுக்கு இந்த மாதிரி கதைகளுக்கு லாரன்ஸ் மாஸ்டர் மட்டுமே நடிப்பு சொல்லிக் கொடுக்க முடியும். அதன் மூலம் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை சிரிக்க வைக்க முடியும். ஆனால், அருந்ததிக்கு கோவை சரளாவை எதற்காக வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. சன் டிவிக்கு ரேட்டிங் பயமா என்று தெரியவில்லை.
லாரன்ஸ் மாஸ்டர்
அருந்ததி சீரியலில் கோவை சரளா வந்ததில் சன் டிவிக்கு எந்தவித ரேட்டிங் ஏற்றமும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த ஒரு வாரமும் யாரும் அருந்ததி சீரியலை அவ்வளவாக பார்க்கவில்லை என்றால் நம்புவீர்களா? கோவை சரளா லாரன்ஸ் மாஸ்டர் சர்க்கசில் ஆட்டி வைக்கும் குரங்கு மாதிரிங்க. அது ஏன் அருந்ததி இயக்குநருக்கு புரியவில்லை.
மிரட்டல் அலட்டல்
இப்போது மீண்டும் அருந்ததி சீரியல் மிரட்டல், அலட்டல் இல்லாமல் நன்றாக ஒளிபரப்பாகிட்டு வருது. திடீர்னு கதையை கெடுத்துக்காதீங்க. சின்னத் திரைக்கு கோவை சரளா வந்தால், அதுவும் பேய் கதையில் வந்தால் லாரன்ஸ் மாஸ்டருடன் வந்தால் மட்டுமே அவரிடம் நகைச்சுவை கலந்த பயத்தை எதிர்பார்த்து சிரிக்கலாம் என்பதை நினைவில் கொள்க.