Don't Miss!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- News ஐஏஎஸ்னா சும்மாவா? இதுதான் யுபிஎஸ்சி தேர்வின் மறுபக்கம்! 12 முறை தோற்றவரின் அனுபவம்! ரொம்பவே ரிஸ்க்
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்த 'நாதஸ்' திருமுருகனுக்கு வேற வேலையே இல்லையா.. 'ஐடியா' அவுட்டாகிப் போச்சா!!
சென்னை: வர வர மாமியார்.. இந்தப் பழமொழி நாதஸ்வரம் இயக்குநர் திருமுருகனுக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் வர வர அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்திருக்கிறார்..
மெட்டி ஒல மூலம் ஹிட்டாகிப் போன திருமுருகன் அதற்குப் பிறகு சினிமாவுக்குப் போனார். 2 படம் கொடுத்தார். ஒன்று ஹிட்.. இன்னொன்று டவுன்.. அதன் பிறகு மீண்டும் டிவிக்கே திரும்பினார்.
இவரது இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் வரும் நாடகம்தான் நாதஸ்வரம். மெகா சீரியல்.. எனவே ரொம்ப காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. நடிப்பவர்களுக்குக் கொஞ்சம் கூட போரடிக்காமல்.
ஒரே கய்யா முய்யா சத்தம்
நாதஸ்வரம் சீரியலில் சிலருடைய குரல்கள் அப்படியே எலிக்குஞ்சு கீச் கீச்சென்று கத்துமே அப்படித்தான் இருக்கிறது. பழைய ரேடியோ பொட்டியை காதுக்குள் திணித்துக் கொண்ட பீலிங் வரும் அவர்களின் கொரல்களைக் கேட்கும்போது.
மேட்டர் என்னென்னா...
திருமுருகன் மெட்டி ஒலியின்போதே ஒரு புது ஐட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது விளம்பர இடைவெளியே இல்லாமல் ஒரு எபிசோட் என்று. அது அப்போது செம ஹிட்டானது.
படத்துலேயும் அதே போல
இதைத் தொடர்ந்து தான் இயக்கிய முதல் படமான எம் மகனிலும் ஒரு பாடலை முழுவதும் இயற்கையான சத்தத்தை வைத்தே இசையமைத்து புதுமையைப் புகுத்தினார்.
அட மறுபடியும் அதே கரட்டாண்டி
இந்த நிலையில் விளம்பர இடைவெளியே இல்லாமல்.. என்ற பழைய அஸ்திரத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
அட இப்பத்தானப்பா கேப்பே விடாம பேசினீங்க...
சில வாரங்களுக்கு முன்பு அதே விளம்பர இடைவெளியில்லாத ஒரு எபிசோடை ஒளிபரப்பினர்.
ஆனால் லைவ் ஆச்சே...
அதை விட முக்கியமாக அதை லைவ் ஆகவும் ஒளிபரப்பி உலக சாதனையும் படைத்தார்கள்.
மறுபடியும் கேப்பே விடாமல்
இந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்பே இல்லாமல் கெடா வெட்ட அதாவது எபிசோடை ஒளிபரப்பவுள்ளனர். அதாவது இன்று இரவு நாதஸ்வரம் சீரியலை பார்ப்போர், விளம்பர இடைவெளியே இல்லாமல் பார்க்க முடியுமாம்.
ஒரு வேளை நாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பார்த்தா...
ஒரு வேளை நீங்க நாதஸ்வரம் சீரியலுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடப் போகும் போட்டியைப் பார்ப்பதாக இருந்தால் இந்த செய்தியை இந்த ஸ்லைடோடு படிக்காமல் நிறுத்தி விட்டு மேட்ச் பார்க்கப் போகலாம்.
அட .. முருகா..
கேப்பே இல்லாமல் எபிசோட் ஒளிபரப்புவது, லைவ் ஆக ஷோ காட்டுவது போல வே்ற ஏதாவது புதுமையாக இருந்தால் அதை செய்யலாமே திருமுருகன்... மாறாக ஒரே ஐட்டத்தையே திரும்பத் திரும்பச் செய்தால் மக்கள் கேப் விட்டு விட்டால்...
ஏதோ மனசுக்குத் தோண்றியது... சொல்லிட்டோம்!