Don't Miss!
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Automobiles கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- News சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
- Lifestyle சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
Barathi Kannamma Serial: அகில் காதல் செத்துப் போச்சு.. மீண்டும் துளிர்க்குமா?
சென்னை:முன்னம் இருந்த காதல் இப்போ செத்துப் போச்சு...டைம் கொடு மீண்டும் வருமா பார்க்கலாம் என்று அகில் அஞ்சலியிடம் சொல்கிறான். அஞ்சலியும் நம்பிக்கையுடன் சிரிக்கிறாள். அப்படீன்னா மீண்டும் காதல் துளிர்க்கும்.
மிஸ் சென்னை அஞ்சலியை அகிலன் ரொம்ப காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான். அஞ்சலி அகிலன் அண்ணன் பாரதியை ஒரு தலையா காதலிச்சுக்கிட்டே தம்பி அகிலனை கல்யாணம் செய்துக்கறா. இதனால், அகிலன் காதலை அவளால் புரிஞ்சுக்க முடியலை.
இப்போ அகிலனை அஞ்சலி லவ் பண்றா...ஆனால், அகிலன் இவளை விட்டு மனத்தளவில் எங்கோ போய்விட்டான். மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு வா என்று அஞ்சலி கூப்பிடுகிறாள்... அதற்குத்தான் அவன் கொஞ்சம் டைம் கொடு என்று கேட்கிறான்.
குழந்தை பாக்கியம்
யாரோ பெத்த குழந்தைக்கெல்லாம் பேர் வைக்கிறேன்.. என் ரத்த உறவு குழந்தைக்கு எப்போ பேர் வைக்கப் போறேனோ தெரியலை என்று சவுந்தர்யா அம்மா புலம்பிகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு கண்ணீரும் கூட வந்துருது. அஞ்சலி.. நான் சொல்றது உனக்கு கேட்குதான்னு சின்ன மருமகள் அஞ்சலியைப் பார்த்து கேட்கறாங்க. கேட்குது அத்தைன்னு அஞ்சலி சொல்றா.
மிஸ் சென்னையாச்சே
நீ மிஸ் சென்னையா இருந்தவளாச்சே.. குழந்தை பெத்துக்கிட்டா அழகு குறைஞ்சு போயிரும்னு தள்ளிப் போட்டு வச்சு இருக்கியான்னும் கேட்கறாங்க. இல்லை அத்தைன்னு அஞ்சலி மழுப்பறா. ரெண்டு மருமகள்களில் ஒருத்திக்குத்தான் குழந்தை பிறக்காதுன்னு ஆகிப் போச்சு...நீயும் ஆஸ்ரமத்துல எனக்கு தெரியாம தத்து எடுக்கணும்னு நினைப்பு வச்சு இருக்கியான்னு கேட்கறாங்க.. அப்படி எல்லாம் இல்லை அத்தை என்று சொல்கிறாள் அஞ்சலி.
அகில் அஞ்சலி
தனியா நின்றுக்கொண்டு இருக்கும் அகிலனிடம் பேச போகிறாள் அஞ்சலி. அவன் என்ன அஞ்சலி இந்த நேரத்துல இங்கே இருக்கே. உனக்கு உன் பாட்டி, அம்மாகிட்டே நிறைய பேச வேண்டியது இருக்கும். கண்ணம்மா அண்ணிக்கு குழந்தை பிறக்காதாம். அத்தை என்கிட்டே குழந்தை கேட்டாங்கன்னு புறணி பேசற வேலை நிறைய இருக்குமேன்னு சொல்றான்.
அகில் ஐ லவ் யூ
அஞ்சலி பேசாமல் கிளம்ப என்ன அஞ்சலி பேசாம கிளம்பிட்டேன்னு அகில் கேட்க, இல்லை நீ கலாய்க்கற மூடில் இருக்கே.. நான் சீரியஸா பேசப்போயி, அதையும் நீ கலாய்ச்சா எனக்கு மனசு கஷ்டமா இருக்கும்னு சொல்றா. இல்லை அஞ்சலி கலாய்க்கலை... நீ சொல்லுன்னு சொல்றான் அகில். ஐ லவ் யூ..அகில்... நிஜமா உன்னோட ஃபேமிலி அட்டாச்மென்டா.. இல்லை நீ என்னை ரவுடிங்க கிட்டே இருந்து காப்பாத்தினதா... இல்லை உன்னோட ஸ்மார்ட்னெஸ்ஸா... ஏதோ ஒன்னு எனக்கு பிடிச்சுப் போச்சு..
குழந்தை பெத்துக்கலாம்
அகில் அத்தை சொன்ன மாதிரி நாம ஏன் ஒரு குழந்தையை பெத்துக்க கூடாது அகில்னு கேட்கிறாள். இல்லை அஞ்சலி.. நான் இப்போ மனசளவில் ரொம்ப தூரம் விலகிப் போயிட்டேன். முன்னால் இருந்த காதல் இப்போ இல்லை. நீ உன்னை முழுசுமா மாத்திக் காட்டு.. அதுவரைக்கும் எனக்கு டைம் கொடு...என் மனசுல காதல் மீண்டும் துளிர்க்குதா பார்க்கலாம் என்று சொல்லிட்டு போறான் அகில். அவனைத்தான் நம்பிக்கையுடன் பார்த்து சிரிக்கிறாள் அஞ்சலி.