Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாணி ராணி: புதைக்கப்பட்ட பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா?
சென்னை: சவப்பெட்டிக்குள் வைத்து மண்ணில் புதைக்கப்பட்ட வாணியின் கணவர் பூமிநாதன் இன்றைக்காவது வெளியே வருவாரா என்று வாணி ராணி சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராணி பிராத்தனைக்கு பலன் கிடைக்கணும். எப்படியாவது பூமிநாதனை, வாணி காப்பத்தணும் என்று டுவிட்டரில் வேண்டுதல் வைக்கின்றனர் ரசிகர்கள்.
அதே சமயத்தில் சினிமா சீன்களை காப்பியடித்து சீரியலில் சீன் வைக்க ஆரம்பித்து விட்டார்களே என்று கிண்டலடிக்கின்றனர் வலைஞர்கள்.
ராதிகாவின் வாணி ராணி
சன்டிவியில் இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் இப்போது திடீர் திருப்பங்களும், பரபரப்பு காட்சிகளும் ஒளிபரப்பாகி வருகிறது. வாணியின் கணவர் பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து உயிரோடு புதைத்து விட்டனர்.
தேடி அலையும் வாணி
கணவர் புதைக்கப்பட்ட இடத்தை தேடி அலைந்த வாணி ஒரு வழியாக பூமிநாதன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து விட்டார். ஆம்புலன்ஸ், போலீஸ் சகிதமாக பூமிநாதனை காப்பாற்ற வந்து விட்டார் வாணி.
நாலு நாள் ஆச்சேப்பா
நாலு எபிசோடுகளாக இதேதான் போய்கொண்டிருக்கிறது. பூமிநாதனை சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்து நான்கு நாள் ஆகிவிட்டது. இன்றைக்காவது வெளியே வந்துவிடுவாரா பூமிநாதன் என்பதை கிரியேட்டிவ் ஹெட் ராதிகாதான் முடிவு செய்ய வேண்டும்.
|
கடவுளே காப்பாத்து
பூமிநாதனை எப்படியாவது காப்பாத்தணும், ராணி வேண்டுதல் பலிக்கணும் என்பது டுவிட்டர்வாசிகளின் கவலை.
எலி, பாம்பு வருதுப்பா
சவப்பெட்டிக்குள் படுத்திருக்கும் பூமிநாதனை பார்க்க எலி விசிட் அடிக்கிறது. அதைத் தொடர்ந்து பாம்பு புகுந்து பூமிநாதனில் மேல் எறி இறங்குகிறது எல்லாம் கிராபிக்ஸ்தான் என்றாலும் எப்படியோ ஓட்டை போட்டு பூமிநாதனை மூச்சு விட ஏற்பாடு செய்து விட்டார்கள்.
|
கணவரை காப்பாற்றிவிடுவாரா?
வாணி ராணியிலாவது தனது கணவரை ராதிகா காப்பாற்றி விடுவார் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர் வலைஞர்கள்.
|
நாய்கள் ஜாக்கிரதை
ஹாலிவுட் படத்தில் இருந்து சீனை உருவி தமிழ் சினிமாவில் சேர்ப்பார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நாய்கள் ஜாக்கிரதை படத்தில் வரும் சவப்பெட்டி காட்சியை வாணி ராணி சீரியலில் சீன் ஆக வைத்து விட்டனர் என்றும் வசை பாடுகின்றனர் வலைஞர்கள்.
பூமி வந்தா சரிதான்
எது எப்படியோ வாணி ராணி தொடரில் பூமிக்குள் புதைக்கப்பட்ட பூமிநாதனை இன்றைக்காவது வெளியே எடுத்தால் சரிதான். வெளியே வந்து விடுவாரா? பூமிநாதன்.