Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேமரா இருப்பதை மறந்து சொல்லக் கூடாத உண்மையை உளறிய யாஷிகா #BiggBoss2Tamil
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த உண்மையை யாரும் சொல்லக் கூடாதோ அதை சொல்லிவிட்டார் யாஷிகா.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கொடூர மொக்கையாக இருக்கிறது என்ற விமர்சனம் தான் அதிகம். நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. பாவம் யாஷிகா தான் ஒரு உண்மையை உளறிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் செய்வதை பார்த்தால் டிவியை ஆஃப் செய்யத் தோன்றுகிறது.
கேமரா
யாஷிகா ஆ, ஊன்னா சிசிடிவி கேமரா முன்பு நின்று பேசுகிறார் இல்லை என்றால் கேமராவுடன் பேசுகிறார். கேமராவுக்கு முன்பு பேசினால் ஓவியாவாகிவிடலாம் என்று நினைக்கிறாரோ.
பாய் ஃபிரெண்ட்
மேக்கப் போடும்போது கேமராவை பார்த்து என்ன சைட் அடிக்கிறியா, எப்ப பார்த்தாலும் என்னை பார்க்கும் உன்னை போன்று பாய் ஃபிரெண்ட் கிடைத்திருக்கணும் என்கிறார் யாஷிகா.
தமிழ்
எல்லாத்தையும் விட்டுட்டு இங்க நடிக்க வந்திருக்கிறோம். நாம் தமிழில் பேசுவதை பாராட்டாமல் பஞ்சாப், பெங்காள் என்று ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் அப்பாவியாக கேட்கிறார் யாஷிகா. கேமராவுக்கு முன்பு நடிப்பதை யாரும் சொல்ல மாட்டார்கள். பாவம் அது தெரியாமல் சின்னப்புள்ள உளறிவிட்டது.
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு ஆட யாஷிகாவுக்கு மும்தாஜ் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்கிறார். யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் பாவம் லூசு மாதிரி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து சக போட்டியாளர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
பொத பொத
ஐஸ்வர்யா தத்தாவை பிடித்திருக்கிறது என்கிறார் ஷாரிக் ஹஸன். ஐஸ்வர்யா க்யூட்டாக இருப்பதுடன், பொத பொதவென இருப்பதால் பிடித்திருக்கு என்கிறார் ஷாரிக். என்ன ஒரு விளக்கம் ஷாரிக்.
கர்வம்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களில் நான் தான் அழகு என்கிறார் ஜனனி ஐயர். ஜனனியின் பேச்சை நம்பிக்கை என்று கூறினாலும், கர்வமும் லைட்டாக எட்டிப் பார்க்கிறது. ஷாரிக் ஹஸனின் கண்கள், ஹேர் ஸ்டைல், மகத்தின் பாடி பிடித்திருக்கிறது என்று ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
தாய்க்கெழவி
யாஷிகாவை போய் தாய்க்கெழவி என்று கூறிவிட்டார் பொன்னம்பலம். எங்கள் செல்லக்குட்டியை பார்த்து கெழவி என்பதா என்று யாஷிகா ஆர்மி கொந்தளித்துள்ளது பொன்னம்பலம்.