ஏன் அப்போ தெரியலையா தப்பே...? கொதித்தெழுந்த யாஷிகா.. பிக்பாஸ் களேபரங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சற்று அமைதி காத்து வந்த யாஷிகாவும் தற்போது கத்த தொடங்கிவிட்டார்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சற்று அமைதி காத்து வந்த யாஷிகாவும் தற்போது கத்த தொடங்கிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தினமும் அதிரடியான அடிதடி புரமோக்கள் வெளியாகி வருகின்றன. இன்றைய புரமோக்களை பார்க்கும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது போல.
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கை போட்டியாளர்கள் படு சீரியஸாக கொண்டு செல்கின்றனர். நேற்று மகத், ரித்விகாவை பிடித்து தள்ளினார்.

முடியை பிடித்து இழுத்து
இன்றைய புரமோவிலும் வெள்ளந்தி என கூறப்படும் சென்றாயன் ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுத்து பிஸிக்கல் வயலன்ஸில் ஈடுபட்டார். இதனால் களேபரமானது.

கத்தும் யாஷிகா
இந்நிலையில் மீண்டும் வெளியாகியுள்ள புரமோவில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் சகட்டு மேனிக்கு கத்துகின்றனர். ப்ளு டீம் வைத்துள்ள பொம்மையை யாஷிகா எடுத்து செல்கிறார்.

ஜனனிதான் காரணம்
இது மகத்திற்கு பதிலடி கொடுப்பதற்காக என தெரிகிறது. ஆனால் இதற்கு காரணம் ஜனனி என்றும் புரமோவை பார்க்கும் போது அனுமானிக்கப்படுகிறது.

அப்போ தெரியலையா தப்பே?
யாஷிகா பொம்மையை எடுத்து சென்றதை ப்ளு டீமினர் தப்பு என்கின்றனர். அப்போது ஆவேசமடையும் யாஷிகா அப்போ தெரியலையா தப்பே? தப்பு அப்போ தெரியலையா என கத்துகிறார்.

ரசிக்கும்படி
இதுவரை மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆவேசமாக கத்திதான் பார்த்துள்ளோம். தற்போது யாஷிகாவும் படு ஆவேசமாக கத்தியுள்ளார். ஆனாலும் அவரது கத்தலும் பாடி லாங்வேஜும் ரசிக்கும்படியாக தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











