Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டிவி சீரியல் ஷூட்டிங்கில் குடுமிபுடி சண்டையா: நடிகை விளக்கம்
மும்பை: தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பேபி ருஹானிகாவுக்கும், தனக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை நடிகை அதிதி பாட்டியா தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான ஏ ஹை முஹப்பதைனில் நடித்து வருபவர் அதிதி பாட்டியா(17). அவர் அதே தொடரில் நடிக்கும் 9 வயதான பேபி ருஹானிகாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று கூறினாராம்.
இதை கேட்டுவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த ருஹானிகாவின் அம்மா அதிதியுடன் சண்டைக்கு பாய்ந்தார் என்றும், இருவரும் மல்லுக்கட்டினார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.
இல்லை
சண்டை செய்தி வெளியான நேரத்தில் அதிதி ருஹானிகாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரச்சனை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரம்
நான் ருஹானிகாவின் நடிப்புத் திறன் பற்றி எதுவும் பேசவில்லை. நான் குழந்தையாக இருந்ததில் இதுவரை 17 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது கேமராவுக்கு முன்பு ஒரு குழந்தை நின்று நடிப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் அதிதி.
தைரியம்
குழந்தையாக இருந்து கொண்டு கேமராவுக்கு முன்பு நின்று நடிக்க தைரியம் தேவை. ருஹானிகா ஒரு அருமையான நடிகை. அவரை எப்பொழுதுமே நான் பாராட்டியுள்ளேன் என அதிதி தெரிவித்துள்ளார்.
வார்த்தை
நான் ருஹானிகா பற்றி எதுவும் தவறாக பேசவில்லை. யாராவது எதையாவது கேட்டு தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. தவறாக எதையாவது புரிந்து கொண்டு செயல்படும் முன்பு நானும் சிறுமி தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அதிதி கூறியுள்ளார்.
தங்கை
ருஹானிகாவை நான் என் தங்கை போன்று நினைக்கிறேன். என்னை விட பெரியவர்களோ, சிறியவர்களோ யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும் என என் அம்மா சொல்லிக் கொடுத்துள்ளார் என்கிறார் அதிதி.