நான் ரௌடி பேபியின் கணவர் மாதிரி.. ரசிகர்களை குஷிப்படுத்த தான் அந்த மாதிரி வீடியோ.. சிக்கா பளிச்!

சென்னை: பாண்டிச்சேரி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாக பிரபல யூடியூபரின் மகன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிக்கா பேட்டி அளித்துள்ளார். அதில் நான் ரௌடி பேபியின் கணவர் மாதிரி என்று கூறியுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களைப் அனுப்பிநட்பாக பழகி உள்ளனர். இதையடுத்து, சிறுமியின் ஆபாச வீடியோவையும் அனுப்பி தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து, சிறுமியின் தாயார் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து,போலீசார் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது, மதுரையைச் சேர்ந்த யூடியூபர் சிக்கந்தர்-சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி என்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவனை கைது செய்தனர்.

youtuber sikka rowdy baby surya

யூடியூபர் சிக்கா: மேலும், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர், சுமி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சிக்கதா, அதில் என் மகன் தவறு செய்து இருந்தால், நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.ஆனால், தேவை இல்லாமல் என் மகனை இதில் கோர்த்துவிட்டு இருந்தால், சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.

இதையடுத்து, ரௌடி பேபி சூர்யா குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிக்கா, நானும் ரௌடி பேபியும் முன்பு தான் ஆபாசமாக வீடியோ போட்டுக்கொண்டு இருந்தோம். ஆனால், இப்போது அப்படி வீடியோ போடுவது இல்லை. ஆனால், சூர்யா தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக படுத்துக்கொண்டே, கொஞ்சம் கவர்ச்சி காட்டி வீடியோ போடுகிறார்கள் அவ்வளவு தான்.

பாய் பெஸ்டி: நீங்க கணவரா? கணவர் மாதிரியா என்ற கேள்விக்கு, நான் கணவரும் இல்லை, கணவர் மாதிரியும் இல்லை, நான் அவருக்கு நல்ல தோழன், அதாவது காட் பாதர் போல, சூர்யாவையும், பசங்களையும் கவனித்து கொள்வேன். கணவர் செய்யும் அனைத்தையும் செய்வேன். அதாவது பாய் பெஸ்டி மாதிரி. நான் கடந்த ஐந்து வருடமாக, சூர்யாவுடன் தான் இருக்கிறேன் என்னுடை ரசிகருக்கும், சூர்யாவின் ரசிகர்களுக்கும் இது நன்றாகவே தெரியும். நான் சூரியாவை நிறைய மாற்றி இருக்கிறேன். முன்பெல்லாம், சரக்கு அடித்துவிட்டு லைவில் அசிங்க அசிங்கமாக பேசுவார். அப்போது அதை செய்வது இல்லை, நான் பலமுறை எடுத்து சொல்லியதை அடுத்து, சூர்யா இப்போது மாறி இருக்கிறார்.

சண்டை வரும்: சுமி, சூர்யா இரண்டு பேருடன் கடந்த ஐந்து வருடமாக குடும்பம் நடத்தி வருகிறேன். என் மனைவிக்கு அனைத்து கடமையையும் செய்துவிட்டேன். ஆனால் சூர்யாவிற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அவள் சில நேரம் என்னை வெறுப்பது போல பேசுவாள். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. இதனால், சுமிக்கும் எனக்கும் நிறைய சண்டை வரும், இருந்தாலும் எல்லாத்தையும் சொல்ல அவளை நான் சமாதானப்படுத்துவேன் என்று சிக்கா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X