ஏமாந்து போன ஐஸ்வர்யா.. காட்டி கொடுத்த பாம்பு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி தப்பு செய்தது யார் என்பதை தெரிந்து கொள்ள பூஜை செய்கிறார்.

இதில்இருந்து தப்பித்துக்கொள்ள கோவிலில் ஐஸ்வர்யா பாம்பாட்டியை வைத்து கார்த்தியை கொத்த ஏற்பாடு செய்தாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

zee tamil Karthigai Deepam serial november 17th today episode

சிறுமி உருவத்தில் அம்மன்: இதையடுத்து இன்றைய எபிசோடில்,தீபாவை அரிவாளால் வெட்ட வந்த பூசாரி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீழ்ந்து கிடந்து தண்ணீர் தண்ணீர் என கலைத்தபடி கேட்டு கொண்டிருக்க அங்கு வரும் சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். வீடே இல்லாத இடத்தில் நீ எப்படி தண்ணீர் கொண்டு வந்த என்று பூசாரி கேட்க அந்த பெண் அம்மன் என தெரிய வருகிறது.

கோவில் பூஜை: தீபாவை கொல்ல செய்த சதி வேலைகளை நீயே போய் ஒப்பு கொள் என்று மிரட்ட பூசாரி நான் செய்தது தப்பு தான் என மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கோவிலுக்கு கிளம்பி செல்கிறார். இங்கே கோவிலில் பூஜை நடந்து கொண்டிருக்க பாம்பாட்டி பாம்பை திறந்து விடுகிறான். அந்த பாம்பும் ஆட்கள் இருக்கும் இடத்திற்கு ஊர்ந்து வர அனைவரும் பாம்பு வந்து விட்டது, யாரை காட்டி கொடுக்க போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

zee tamil Karthigai Deepam serial november 17th today episode

வசமா சிக்கிய ஐஸ்வர்யா: இந்த பாம்பு முதலில் கார்த்தியையே பார்த்து விட்டு திடீரென திரும்பி ஐஸ்வர்யாவை கொத்துகிறது. இதனையடுத்து பூசாரி பூஜை நல்லபடியா முடிந்தது, அந்த அம்மனும் தப்பு பண்ணவங்கள கண்டு பிடிச்சி கொடுத்துருச்சு. இனிமே இது உங்கள் குடும்ப பிரச்சனை, நீங்களே பேசி தீர்த்துக்கோங்க என்று சொல்லி கிளம்பி செல்ல ஊர் மக்களும் கலைந்து செல்கின்றனர்.

zee tamil Karthigai Deepam serial november 17th today episode

அடிவாங்கிய ஐஸ்வர்யா: அதன் பிறகு அங்கு வரும் பூசாரி அன்னைக்கு கோவில் திருவிழாவில் தீபாவை கொல்ல ஏற்பாடு செய்தது ஐஸ்வர்யா தான், பணத்தாசை காட்டி என்னையும் மாற்றிட்டாங்க என செய்த தவறுகளை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அருண் ஐஸ்வர்யாவை பிடித்து திட்ட மைதிலி அபிராமியை கேள்வி கேள்வி கேட்டு ஏற்றி விடுகிறாள்.

இதனால் உச்சகட்ட கோபமடையும் அபிராமி வீட்டிற்கு வந்ததும் ஐஸ்வர்யாவை பளாரென அறைகிறாள். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X