கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் இதுவரை, மீனாட்சி கொஞ்சம் மயங்கி உட்கார்ந்து விட தீபா மேடைக்கு பின்புறமாக சென்று பாடுகிறாள்.
அப்போது கார்த்திக் அங்கு சென்று திரையை விலக்கி பார்க்க முயன்ற போது, தீபா வேண்டாம் என தடுத்து விடுகிறார். இதையடுத்து, கார்த்திக் புதுசா ஒரு மியூசிக் கம்பெனி வாங்கி இருக்கேன் அங்க நீங்க வந்து கண்டிப்பா பாடவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான்.

இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
இன்றைய எபிசோடு: இளையராஜா பல்லவி பாடியதை பார்த்தியா என்று கேட்க கார்த்திக் நடந்து விஷயங்களை அனைத்தையும் சொல்ல இதுக்கா இவ்வளவு செலவு பண்ண என்று கேள்வி கேட்கிறான். மேலும் பல்லவிக்காக போடப்பட்டிருந்த திரை செட்டப்பையும் காட்டுகிறான்.
அதன் பிறகு தீபா கார்த்திக்கு தெரியாமல் மீனாட்சியை அழைத்துக் கொண்டு கிளம்ப அங்கிருந்து தப்பித்த ரூபஸ்ரீ, கோகிலா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பிரச்சனை வந்தா தான் நான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியறேனா என கோபப்படுகிறார். சரி ஏதாவது செய்யலாம் எனவும் வாக்கு கொடுக்கிறாள்.

தப்பாகி விடும்: அதன் பிறகு தீபா கார்த்திக்கிடம் பல்லவியை பாத்தீங்களா என்று கேட்க அவள் இல்ல அவளுடைய பர்சனல் வாழ்க்கையில தலையிடுற மாதிரி இருந்தா அதை செய்யக்கூடாது. அப்படி செய்கிறது தப்பு என சொல்கிறான். ஒரே ஒரு திரை தானே விலக்கி இருக்கலாமே என்று கேட்க இல்லை அப்படி செஞ்சிருந்தா அது தப்பாகி இருக்கும் எனவும் கூறுகிறான்.
சோகத்தில் தீபா: அதன் பிறகு தீபா கார்த்திக்கு பால் கொண்டு வந்து கொடுக்க பல்லவி கையில் இருந்த மருதாணியை பார்த்த கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்து விடுவானோ என்ற டென்ஷன் எகிறுகிறது. அதோடு நைட் எல்லாம் கார்த்தி தூங்காமல் இருக்க அதை பார்த்து தீபா சோகம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











